அட்சயத் திருதியையா அல்லது அரசு உறுதிமொழியா?
தங்கக் கடைகள் மீண்டும் தகதகக்க ஆரம்பித்து விட்டன! இந்தியா முழுக்க நடந்துவந்த, நீடித்த கடை அடைப்புப் போராட்டத்துக்கு ஒருவழியாக முற்றுப் புள்ளி வைத்து இருக்கிறார்கள் நகை வியாபாரிகள். ''தொடர்ந்து 21 நாட்களாக நடந்த போராட்டத்தால், இந்தத் தொழிலில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு. இதில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்பு மட்டும் 1,200 கோடி ரூபாய்Ó என்கிறார் அகில இந்திய நகை வியாபாரிகள் சம்மேளனத் தலைவர் பச்ராஜ் பமல்வா. என்ன பிரச்னை? நடப்பு (2012-13) நிதிஆண்டுக்கான மத்திய பட் ஜெட்டில், தங்க நகைகளுக்குப் புதிய வரி விதிப்பும், வரி உயர்வும் அறிவிக்கப்பட்டது. 'வர்த்தகப் பெயர்' (பிராண்டட்) இல்லாத தங்க நகைகளுக்கு 1 சதவிகிதம் உற்பத்தி வரி, இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு 2 சதவிகிதமாக இருந்த. . .