முனிவரைப் போன்ற நரைத்த சிண்டு, ஜிப்பா, நைந்துபோன வேட்டி, சால்வை, கழுத்தைத் தழுவும் தாடி, கைகளில் புரட்சி கக்கும் புத்தகங்கள், காலணியைக் கண்டிராத காய்த்த பாதங்கள் - இப்படிப்பட்ட தோற்றத்துடன் ஒருவரை, பெங்களூருவில் நடக்கும் போராட்டங்களில் முதல் வரிசையில் நிச்சயம் காணலாம். அவர் பெயர் அம்ருத் அம்ரோஸ்! பேசாமல் இரண்டு நிமிடங்கள் இருந்தாலே நம்மில் பலருக்குத் தலை வெடித்துவிடும். ஆனால் இவர் எட்டு ஆண்டுகளாக வாய் திறந்து பேசாமல், மௌனப் போராட்டம் நடத்தி வருகிறார். இயற்கை தரும் பெரும் கொடையான தண்ணீரை, காசுக்கு விற்றுக் கொழுக்கும் பண முதலைகளுக்கு எதிராகத்தான் இந்தப் போராட்டம். ஆமோதிப்பு, கடுங்கோபம், சத்தமில்லா சிரிப்பு, சைகைகள், காகிதத்தில் கிறுக்கல்களாக அம்ருத் தெரிவித்ததை, வார்த்தைகளாகத் தருகிறோம். ''என் மூதாதையர்களின் ஊர் தருமபுரி. நான் பிறந்து. . .