# தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 34 பேர் மாற்றம் # நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 % பங்குகளை விற்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெ. கடிதம் # தோல்வியால் ஆத்திரம்: நடுவரை அடித்த ராஜபக்சே மகன் # திருமாவளவனுக்கு தடை: விழுப்புரம் கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு # நோ பால் விவகாரம்: ஸ்ரீசாந்தை மிரட்டிய தரகர்கள் # ராமதாஸ், காடுவெட்டி குரு மீது தமிழக அரசு அவதூறு வழக்கு # மாசு வெளியேற்ற விவகாரத்தில் இரட்டை நிலை: தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் புகார் # பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு # சேப்பாக்கம் மைதானம்: 3 கேலரிகளுக்கு மீண்டும் சீல் # கிரிக்கெட் சூதாட்டம்: பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் மும்பை போலீஸ் விசாரணை # இலங்கைக்கு உதவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது: பசில் ராஜபக்சே # தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு #


Comment count53
save
print A+     A-
காலா... அருகே வாடா

அதிகாலையிலேயே முருகேசனுக்கு விழிப்பு வந்துவிட்டது. அதிகாலை என்றுதான் நினைத்தான். ஆனால், ஜன்னல் வழியே வந்த வெளிச்சம் சூரிய ஒளி அல்ல; தெருவிளக்கின் பிரதிபலிப்பு என்று தெரிந்தவுடன் செல்போனை எடுத்து மணி பார்த்தான். இரண்டரை. எழுந்தான். எழுந்திருக்க முடியவில்லை. கால்களில் யாரோ சங்கிலியால் கட்டியது போன்ற வலி. எழுந்து அமர்ந்து பாதங்களைத் தடவிப் பார்த்தான். பயங்கரமாக வீங்கியிருந்தன. வயிற்றிலும் ஏதோ பிரச்னை என்று உள்ளுணர்வு சொல்ல, தடவிப் பார்த்தால் அது பானைபோல் உப்பியிருந்தது. இரண்டு கைகளும் வீங்கி இருந்தன. முதுகில் ஒரே அரிப்பு. சொறிந்துவிட்டுக் கையைப் பார்த்தால், அதில் பிசுபிசுப்பாக வழிந்த ரத்தம். சம் திங் ராங்.  கஷ்டப்பட்டு எழுந்து விளக்கைப் போட்டான். அவன் கால்களையும் கைகளையும் வயிற்றையும் பார்க்க அவனுக்கே பிடிக்கவில்லை. விடிந்ததும் எங்காவது பெரிய ஆஸ்பத்திரிக்குப். . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
Vivek1 Years ago
மரணத்தை விட கொடியது மரணத்திற்காக காத்திருப்பதும் அந்த கசப்பான இறுதி மருத்துவமனை நாட்களுமே!
Chandra1 Years ago
என் அப்பாவுக்கும் இது தான்.மனம் கலங்குகிறது.அப்பா இப்போது இல்லை.I miss you appa. May your soul rest in peace krishna sir.
A.1 Years ago
இது கதையா அல்லது உண்மை நிகழ்ச்சியா என்றுதெரியவில்லை.
வெறும் 15% லிவர் வச்சி ஆள் உயிர் வாழமுடியும் என்று நினைக்க இயலவில்லை.
lalitha1 Years ago
ஆஹா அருமை இந்த மாதிரி பாசிடிவா பேசும் மருத்துவர்கள் இருந்தால் போதுமே மக்கள் சுகமா வாழ
மநதை அதிர வச்ச செய்தி இதை எழுதிய க்ருஷ்னா டாவின்சி இப்பொ இல்லே என அரிஞ்ஜு மனம் அதிர்ந்தேன்
Nagaraj1 Years ago
நெத்தியடி...
S1 Years ago
ஒரு மிக நல்ல கதை, மருந்தே உணவு, உணவே மருந்து என்னும் நம் தொன்மையான (தமிழ்) வாழ்க்கை முறை மாறி, விஷமே உணவு, உணவே விஷம் எனும் நவீன வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டோம். இன்றும் அமெரிக்கவில், வைத்தியர்களின் கொள்கை, நோயாளிகளின் நடப்பு நாளின் வாழ்க்கை முறையில் கொஞ்சமும் சமரசம் செய்யாது, உடனடியாக சொஸ்தப்பட வைப்பதே; அதை குவாலிட்டி ஆஃப் லைஃப் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இம்முறையினால் நிறைய பக்க விளைவுகள் தான் அதிகம்; மருந்து விளம்பரத்தில் கூட, விளம்பர நேரத்திற்கு இணையாக பக்க விளைவுகள் பற்றிய எச்சரிக்கைகள், வெகு வேகமாகவும், வேறு ஓளி வடிவிற்கு முன்னும் சொல்வதால், சொல்லப்படும் எச்சரிக்கைகள் சரியாக கேட்பதில்லை. அவையத்தனையும் ஒதுக்க வேண்டாம், அப்போதைக்கு சாப்பிட்டு, நம் இயற்கை மருந்தையும் எடுத்துக் கொண்டால் என்ன. நம் சுக்கு மல்லி காபியையும், ஆங்கில காபியையும் ஒப்பிடுங்கள்.
manimaranabr1 Years ago
அருமையான கதை என் நண்பரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல இருந்தது
rajagopalan1 Years ago
பெர்னார்ட் ஷாவின் டொச்டொர்ச்' டிலெம்ம நாடகத்தையும், இவான் இல்லிச்சின் Limits to Medicine நூலையும் படித்தவர்கள் தற்கால Corporate மருத்துவமனைக்குச் செல்ல மாட்டார்கள். கல். டா வின்சியின் அனுபவம் சரியானது.
Arun Kamal1 Years ago
கிருஷ்ணா டாவின்சி எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர். அவர் ஆரம்ப காலத்தில் மாலைமதியில் எழுதின ஒரு காதல் கதையை என்னால் மறக்கவே முடியாது. அது போலவே ஜாக்கிரதை வயது 16, பிளஸ்1, நாலாவது எஸ்டேட்...இன்னும் நிறைய சொல்லலாம். அவருடைய நடை ரொம்பவும் வித்தியாசமானது...கிருஷ்ணா சார், ரியல்லி வி மிஸ் யூ..!
Sreeram1 Years ago
நல்ல கதை. ஏகப்பட்ட பணத்தை குடிமகன்களிடம் பிடுங்கிக் கொண்டு அவர்களுக்கு எந்த வித சுகாதாரமான சூழ்நிலையையும் தராமல் மட்டமான சரக்கை வழங்கும் டாஸ்மாக் ஒழிக.
Madras1 Years ago
Just think about it, our grand parents and our great grand parents lived well, just 'cause what they ate. You are what you eat .... now-a-days people LIVE TO EAT
senthil kumar1 Years ago
ரசிச்சு குடிக்கும் எனக்கு சிறு உறுத்தல் மனத்தை கட்டுப்படுத்த இயலவில்லை ,.. 27 வயசில் இவ்வளவு குடிக்கும் எனக்கு கண்டிப்பாக இம்மாதிரியான வியாதிகள் வரும் என்ற பயம் வருகிறது ,.. மீண்டு வருவேன் ,..
Siva1 Years ago
வாவ்... என்ன ஒரு உயிரோட்டம்.. சற்றும் தொய்வில்லாத விறுவிறுப்பான நடை...

Crap1 Years ago
'மூலதனம்கிறது ரத்தம் குடிக்கிற வவ்வால் மாதிரி. உயிர் வாழும் உழைப்பாளிகளோட ரத்தத்தை அது உறிஞ்சிக் குடிக்கும். எவ்வ ளவு ரத்தம் குடிக்குமோ, அவ்வ ளவு நாள் உயிர் வாழும்.’ உங்க மூலதனத்துக்கு ரத்தம் தேவை. அதை என்னால கொடுக்க முடியாது >>>>


மிக நன்று, நம்பிக்கை, நோய், அதன் விளைவுகள் பற்றிய விபரங்கள், மருத்துவத்துறையின் நிறை, குறைகள் என்று பலவகைகளையும் வைத்து எழுதியுள்ளார்.

ஆனால் மேற்கண்ட பத்தியில், சிறு குறைபாடு. டாஸ்மாக்கில் குடித்து லிவரைக் கெடுத்துக் கொண்டதற்கு கார்ல் மார்க்ஸை மேற்கோள் காட்டி, மருத்துவர்களிடம் எரிந்து விழுவது அவ்வளவு ஏற்புடையாதாக இல்லை! நல்ல கதையில் ஒரு சிறு திருஷ்டி!
RAJENDRAN1 Years ago
what happened to krishna a very nice sory
Thiyagarajan1 Years ago
"காலா அருகே வாடா" சிறுகதையைப் படிக்கும்பொழுது நான் மிக மிக உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ந்தே போனேன்! அதுவும் ஆரம்பித்திலேயே கதாசிரியர் கிருஷ்ணா டாவின்சி தற்போது நம்மிடையே இல்லை என்ற செய்தியையும் படித்து விட்டதால் மனம் நெகிழ்ந்த நிலையில் கண்களில் கண்ணீர் பெருகிய நிலையிலேயே கதையைப் படித்து முடித்தேன் ! நான் படித்த பல சிறுகதைகளில் இக்கதை மிகச் சிறந்தவற்றில் முதன்மையான ஒன்று. அதுவும் மகா கவியின் "காலா என்னருகே வாடா ! சற்றே உன்னை மிதிக்கிறேன்" என்ற அற்புதமான கவிதையில் இருந்து "காலா அருகே வாடா" என்று கிருஷ்ணா டாவின்சி கதைத் தலைப்பு கொடுத்தது அருமையிலும் அருமை! அவர் படத்தைப் பார்த்தால் வயது 40 அல்லது 45 க்குள் தான் இருக்கும் என்றும் தெரிகிறது! இத்தனை சிறிய வயதில் எனக்குப் பிடித்த பாரதியைப் போலவே கிருஷ்ணா டாவின்சியும் மரணித்தது மனதை நெருடுகின்றது ! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! தமிழ் இலக்கிய உலகத்திற்கும் கிருஷ்ணாவின் மறைவு மிகப் பெரிய ஈடு செய்யவியலாத இழப்பு !
Prakash1 Years ago
he is great man, your articles are a legacy... will miss you very much sir..
balasubramani1 Years ago
True facts which can not be challenged. Congrats for making awareness. Pray to almighty to bless the author soul to rest in peace.
Anbu1 Years ago
என் அப்பாவை லிவர் சிரோஸிஸினால் இழந்தேன்..இந்தக்கதை அப்படியே என் அப்பா வாழ்வில் நடந்தது போல் உள்ளது...சித்த அலோபதி நாங்கள் முயற்சி செய்யவில்லை..எங்களுக்கு தெரியவுமில்லை.
Sneha Devi1 Years ago
மிக அருமையான கதை என்பது சும்மா. நம்பிக்கை என்ற வாழ்க்கையின் அடி நாதத்தை சொல்லும் கதை. தமிழ் வைத்தியத்தின் பால் அவர் கொண்ட அன்பின் கதை. இப்படி எதேதோ சொல்லலாம். அவர் இல்லை என்பது மனம் வலிக்கிறது.
அன்பு1 Years ago
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்ற குறள் வரிகளுக்குப் பொருத்தமான கதை.
சந்திரா1 Years ago
இந்த கதையை எல்லா டாஸ்மாக் வாசல்லேயும் வைங்க, படிச்சிட்டு எவனும் குடியை நிறுத்திடமாட்டான், அட்லீஸ்ட் சித்தா மருத்துவர்களுக்காவது நல்ல வருமானம் வரட்டுமே,
Yuva1 Years ago
பிரம்மாதம். ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி கதையைப் படித்து. கிருஷ்ணா டாவின்ஸி மரணம் குறித்து எந்த பத்திரிக்கையிலும் படித்த நியாபகம் இல்லையே, என்ன ஆயிற்று?
mjagan1 Years ago
Good Storey thanks to vikatan
S Prabagar1 Years ago
அருமை!! அருமை!!!
  Displaying 1 - 25 of 52
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
11-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices