மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் வரை!
இரண்டு மாதங்களுக்கு முன், 'மேட்டூரில் நீர்மட்டம் குறைந்துவிட்டது; நிலைமை மோசமாகிக்கொண்டுவருகிறது; மின் வெட்டு இருந்தே தீரும்’ என்று செய்திகள் வந்தபடியே இருந்தன. சில நாட்களுக்கு மின் வெட்டுகூட அமலில் இருந்தது. இந்த மாதமோ, திடீரென்று நிலைமை தலைகீழாகிவிட்டது. 'மேட்டூரில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டேபோகிறது. அதிகப்படியான தண்ணீரைத் திறந்துவிட வேண்டி இருக்கிறது. அதனால், காவிரியிலும் கொள்ளிடத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளிலும் உள்ள ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது’ என்ற பரபரப்பான செய்தி அனைவரை யும் கவலையில் ஆழ்த்தியது. 'பார்த்தீங்களா சார், இயற்கையின் திருவிளையாடலை? நாம் என்னமோ திட்டங்கள் போடுகிறோம், அணைகள் கட்டுகிறோம். மழை ஏமாற்றிவிட்டாலோ, அல்லது அளவுக்கு மீறிப் பெய்துவிட்டாலோ ஒன்றும் செய்ய முடியாமல் திண்டாடுகிறோம்’ என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டார்கள். தினந்தோறும் காலையிலும் மாலையிலும் பத்திரிகைகளை. . .