மூட்டுவலி... டாக்டர் காட்டும் வழி!
40 வயது தொடங்கிவிட்டாலே, பலருக்கும் மூட்டுவலி ஆரம்பித்துவிடும். ஆண், பெண் பாகுபாடு இன்றி உலக அளவில் அனைவரையும் தாக்குகிற மூட்டு வலி பற்றிய சந்தேகங்களை பற்றி பார்ப்போம். மூட்டு வலி என்றால் என்ன? நமது உடலில் பல வகையான மூட்டுகள் உள்ளன. இந்த மூட்டுகளில் உண்டாகும் தேய்மானம்தான் மூட்டு வலி ஏற்படக் காரணம். மூட்டுகளுக்கு நடுவில் கார்டிலேஜ் எனப்படும் சவ்வு போன்ற அமைப்பு உள்ளது. கை, கால்களை நீட்டி மடக்குதல், உட்கார்ந்து எழுந்திருத்தல் போன்ற செயல்களின்போது மூட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் தடுக்கும் வகையில், குஷன் போன்று இந்த கார்டிலேஜ் சவ்வு செயல்படுகிறது. வயதானவர்களுக்கு இந்தச் சவ்வுப் பகுதியானது தேய்ந்துபோயிருக்கும். இதனால், மூட்டுகள் ஒன்றின் மேல் ஒன்று உரசி வலி ஏற்படுகிறது. இதைத்தான் மூட்டு வலி என்கிறோம்.. . .