அளவானால் பலம்.. அதிகமானால் பருமன்!
''பருப்பு வகைகளில் புரதச் சத்து, வைட்டமின் - பி காம்ப்ளெக்ஸ் ஆகியவை அதிகமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கு அவை வலிமை சேர்க்கின்றன. எண்ணெய் வித்துக்களும் பருப்பு வகைகளைப் போலவேதான். ஆனால், இவற்றில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. மாடுகள் சாப்பிடும் புண்ணாக்கில் இருந்து எந்த அளவுக்கு அதற்கு சக்தி கிடைக்கிறதோ... அதேபோல் நாம் சாப்பிடும் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் இருந்தும் நம் உடலுக்குத் தேவையான சக்தி அளப்பரிய அளவுக்குக் கிடைக்கிறது. சிகிச்சை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகளுக்கு உடல் மெலிந்து, கொழுப்புச் சத்துக்களும் கரைந்துவிடும். இவர்களுக்குப் பருப்பு வகைகள், நல்ல பலன் அளிக்கும். சருமம் வறண்டு, தொய்வடைந்து இருக்கும் வயோதிகர்கள் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. துறுதுறுவென ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளின் உடலை. . .