# தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு ஹம்மர் கார் பரிசு; ஸ்ரீசாந்த் பகீர் தகவல் # தமிழக அரசின் புதிய உள்துறை செயலராக நிரஞ்சன் மார்டி நியமனம் # வன்னியர்கள் கைது குறித்து விசாரிக்க குழு: ஜி.கே.மணி உயர் நீதிமன்றத்தில் மனு # பிரதமர் வேட்பாளர்: முடிவெடுக்க தயங்குகிறது பா.ஜனதா # ஒவ்வொரு ஐபிஎல் குழுவுடன் ஊழல் தடுப்பு பிரிவு அனுப்பப்படும்: பிசிசிஐ # ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு # கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது # மொபைல் போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் உபகரணத்தை கண்டுபிடித்த இந்திய மாணவி # குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார் # தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மாட்டோம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா # கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் #


Comment count66
save
print A+     A-
கழுகார் பதில்கள்

பல்லவ மன்னன், நெல்லை.  அம்பேத்கரை ஒரு தலித் தலைவராகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அவரை தேசியத் தலைவராகப் பார்ப்பது இல்லையே ஏன்? அம்பேத்கர், தேசியத் தலைவரே. அவரைச் சிலர் சாதிக் கண்ணோட்டத்துடன் பார்க்க, சாதிதான் காரணமாக அமைந்துவிட்டது. இந்தியாவின் எல்லாச் சாதியினரும் எந்தச் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறார்களோ, அதை எழுதியவர் அவர்தானே? தேசியத் தலைவராக அவரை மதிக்க, சிலர் மறுக்கலாம். ஆனால் அம்பேத்கர் எழுதிய சட்டத்தை நிராகரிக்க முடியுமா? நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாவது அவரது சொல்படிதானே எல்லோரும் நடக்கிறார்கள்!  கே.ஏ.என். சிவம், பெங்களூரு. அவை நாகரிகம் என்பதை விளக்க முடியுமா? பெரியார் ஒரு கூட்டத்தில் கலந்து​கொள்வதாக இருந்தது. கடவுள் நம்பிக்கை​கொண்டவர்கள்தான் அந்தக் கூட்டத்தை நடத்தியவர்கள். பெரியார் வருவதற்கு முன்னதாக கடவுள் வாழ்த்துப் பாடலை ஒலிக்க​வைத்துவிடலாம் என்று அவர்கள் திட்டமிட்டு. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
SUBRAMANIA RAO1 Years ago
குரு பக்தி காரணமாக தனது நலனில் அக்கறை கொண்டு கற்பித்து உயர்வு அடைய்ச்செய்த "அம்பேத்கார்" என்ற குடும்ப பட்டப் பெயர் கொண்ட ஆசிரியரின் பெயரை திரு.பீம ராவ்...என்ற மாணவர் தன் பெயருடன் இணைத்து நன்றியறிதலை வெளிப்படுத்தினார். அம்பேத்கார் என்ற பெயரே பின் நிலைத்து விட்டது அல்லாடி கிருஷ்ண சாமி அய்யர். ..அம்பேத்கார் இவர்கள் ஈடிணையற்ற சட்ட மேதைகள். கட்சித்தலைமைப் பீடத்திற்கும் எட்டாத உயர்வான மேன்மை மிக்க தகுதி படைத்தவர்கள் இவர்களை வழி காட்டியாக கொண்டு இவர்கள்து சமத்துவ கருத்துக்களை இவர் பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பித்து பரப்புவது எல்லோரையும் தலை நிமிரச்செய்யும்.
Nanban1 Years ago
அகில இந்திய அளவில் பாலுவுக்குக் கிடைத்த கூடுதல் பிரபல்யத்தையே 'பலன்’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தோம்! என்ன பல்டி இது ஜு விகடன் சார்
Appan1 Years ago
தலைவிரித்து ஆடும் வறுமையைத் தடுப்பது எப்படி? ... கட்டுபாடில்லாமல் குழந்தைகளை பெற்றூகொள்வது நிறுத்துவது, கல்வி அறிவு இவை இரண்டும் தான் வருமையை தடுக்கும்.
Devaraj1 Years ago
"பலன்"oda விளக்கம் is top class. Keep it up கழுகார்.
Mannar Mannan1 Years ago
கழுகாருக்கு வேண்டுமானல் கருணாநிதியைப் பிடிக்காததற்கு பல காரணங்கள் இருக்கலாமா?! அப்படி என்னத்தான் பல காரணங்கள்? அரசியலில் கருணாநிதியைத் தவிர மற்றவரெல்லாம் அவதாரப் புருஷர்களா?
Vijayalakshmi1 Years ago
அவை நாகரிகத்திற்குப் பெரியாரை உதாரணம் காட்டியிருக்கிறீர்கள்...ஏதோ அவர் ஆத்திகர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாதவர் போல்! ராமர் சிலைக்கு செருப்பு மாலைகள் அணிவித்து ஊர்வலம் நடத்தியவர் தானே அவர்! (ஆ.வி. பொக்கிஷத்தில் அந்தப் படங்களைப் பிரசுரிக்கலாம்!)அதைவிட, காமராஜர், ராஜாஜி, நேரு போன்றோரின் நாகரிகச் செயல்கள் எத்தனையோ உள்ளன! ஏன், எம்.ஜி.ஆர் அவர்களே எதிர்க்கட்சிகளை எவ்வளவு மரியாதையுடன் நடத்தினார்!.. உண்மையில் ராமர் ஒரு தெய்வம் என்பதை விட, ஒரு ஆதர்ச மகனாக, கணவனாக, சகோதரனாக, தோழனாக, மாணாக்கனாக, போர் வீரனாக, குடிமக்களை மதிக்கும் அரசனாக வாழ்ந்த ஒரு உயர்ந்த கதாபாத்திரம் என்று அவர் உணர்ந்திருந்தால், இப்படி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டிருக்க மாட்டார். பகுத்தறிவுவாதி என்கிறார்கள்... பாரதி கூடத்தான் அந்தணர் அல்லாதவர்க்கு பூணூல் அணிவித்து அழகு பார்த்தார்.. ராஜாஜி எல்லோருக்கும் ஆலயப் பிரவேசம் கிடைக்கப் போராடினார்.. மகாத்மா எல்லோரையும் ஹரியின் மக்கள் (ஹரிஜன்) என்று கூறினார்.. அதனால் சும்மா ஈ.வெ.ராவை மட்டும் உதாரணம் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
chandra1 Years ago
இந்திய சுதந்திரம் என்ன காந்திர் ஒருவரால் மட்டுமா சாத்தியம் ஆனது......பல கோடி பேர் போராடி பெறப்பட்டது......ஆனால் காந்திக்கு உண்டான புகழ் என் தாத்தாவிற்கு இல்லை.......எனக்கு வருத்தம் இல்லை....அது போல் தான் அண்ணல் அம்பேத்கரும்..................... அந்த குழுவின் தலைவராக "தலித்" என்ற காரணத்துக்காக மட்டுமே காந்தியாரால் பரிந்துரைக்கப்பட்ட அம்பேத்கார் இருந்தார் என்பது பச்ச பாசிச சிந்தனை
Sreeram1 Years ago
"போர்க் கால அடிப்படை’ எல்லாம் புயல், பூகம்பத்துக்கு மட்டும்தான்" அதுக்கும் இல்ல. ஆளுங்கட்சி அரசியல் வாதிகளின் சுய தேவைக்கு மட்டும் தான் போர்க்கால அடிப்படை, மற்ற எதற்கும் இல்லை. 2005ல் சுனாமி வந்தது, சமீபத்தில் தானே வந்தது, எதற்காகவாவது ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா?
tharsan1 Years ago
எல்லாத்துக்கும் கருணா பதில் சொன்னாரா?? , கருணாநிதி இதுவரை கருத்துச் சொல்லாத விசயமே இல்லையா???, தப்பு!!! . கனி, துணைவியார், ராஜா பின்கதவால பதவி பிடிக்க நடந்த நீராடியாவுடனான தொலைபேசி உரையாடலுக்கு இந்த கருத்து சிங்கத்திடம் கருதேயில்லை
usha1 Years ago
தலைவிரித்து ஆடும் வறுமையைத் தடுப்பது எப்படி? ...அனைவருக்கும் வேலை வாய்ப்பு,இலவசங்களை முற்றிலும் ஒழித்தல்.....
BB1 Years ago
Aluwahlia is a mentally retarded guy. We dont have to listen to his words...
Tamil1 Years ago
கிரிமினல் வழக்கு உள்ள எம்.பி.க்கள் மீதான வழக்கையும் உடனடியாக எடுத்து தண்டனை கொடுத்தால், பிரதம்ரை தவிர வேறு யாரும் ஆளுங்கட்சியில் மிஞ்ச மாட்டார்களே...
Tamil1 Years ago
இந்தியா எனும் மரத்தை அரிக்கும் கரையான்களே இற்றைய அரசியல்வாதிகளே...
Tamil1 Years ago
வசூலிற்காக தானே பிறந்தநாள் விழா.. வை.கோ. அவர்கள் அப்படியாக வசூல் செய்ப்வர் அல்லவே...
Tamil1 Years ago
ஜெயாவின் பதவி பசிக்கு முன் விட்டு கொடுக்கும் பேச்சே கிடையாது... விஜயகாந்திற்கு தான் இனி வேண்டாத வேலை,,, புதுக்கோட்டையில் வேறு டிபாசிட் பறி போகும்.. திரனியை காட்ட வேறு, கோடிகளில் செலவு செய்து தெரு தெருவாக வேகாத வெயிலில் அலைந்து உளற வேண்டும்...
Tamil1 Years ago
அதிகாரிகளும் சதிகாரர்களும் கலந்த விஷத்தின் விதையாகி போய்விட்டது நம்முடைய அரசாட்சி... இதை மாற்ற ஒரே வழி என்னவென்றால், திடீர் இராணுவ சர்க்காரை கொண்டு வருவது தான்....
Tamil1 Years ago
கூலிப்படை கலாச்சாரம் என்பதை சற்றே மாற்றி அஞ்சாநெஞ்சரின் அன்பு தம்பிகள் என்று சொல்லி பாருங்களேன்... அர்த்தம் எளிதாக விளங்கும்..
Tamil1 Years ago
மஹாத்மா காந்திக்கும், ஜவஹர்லால் நேருவிற்குமே சம்பந்தம் இல்லை என்பதே என்னுடைய அபிப்பிராயம்... ஏனென்றால், சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரஸ் கட்சியை கலைக்க சொல்லி கெஞ்சினார் காந்தியடிகள், அதை சுத்தமாக மறுத்தவர் நேரு... அடுத்து, நாடு பிளவுப்படாமல் இருக்க, பிரதமர் பதவியை ஜின்னா அவர்களுக்கு விட்டு கொடுக்க சொல்லி மன்றாடினார் நமது அண்ணல் காந்தியடிகள். அதிலும் பதவி போதையின் உச்சத்தில் மறுத்து பாகிஸ்தான் எனும் நிரந்தர எதிரி நாட்டை உருவாக காரணமானார் நேரு.. பல வரலாற்று சம்பவங்களை மூடி மறைக்கும் வேலை நேரு காலத்தில் துவங்கியது... இன்று அது பெரிதாக வளந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்று இத்தாலிய வம்சத்திற்கு இட்லி போல் காந்தியின் நாமம் சேர்க்கப்பட்டுள்ளது...
Tamil1 Years ago
அனைவருக்கும் கல்வி என்கிற ஒரே ஒரு கோட்பாட்டால் தான் அறியாமையின் குழந்தையான தலைவிரித்து ஆடும் வறுமையை ஒழித்தொழிக்க முடியும்...
Tamil1 Years ago
கருணாநிதியிடம் நமக்கு பிடித்ததும், பிடிக்காததும் ஒண்றே ஒண்று தான்... அது என்னவென்றால் "குடும்ப பாசம்" தான்...
Tamil1 Years ago
ஒரு சமயம் குண்றக்குடி அடிகளாரின் அழைப்பை ஏற்று அவரது திருமடத்திற்கு தந்தை பெரியார் விஜயம் செய்தார்... அப்போது, குண்றக்குடி ஆதினத்தின் வழக்கப்படி, தந்தை பெரியாருக்கு பரிவட்டம் கட்டி, திருநீரூ பூசி வரவேற்பு கொடுத்தார்கள்.. இதை சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்ட பெரியாரவர்கள், புகைப்படமெடுத்த பத்திரிக்கையாளர்களிடம் இது அவர்களது நம்பிக்கை அதை நாம் அசிங்கப்படுத்த கூடாது என்று கூறி விட்டு, திரும்பி வரும் வரை இங்கேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டார்... திரும்பி வ்ந்தவர், பத்திரிக்கையாளர்களை அழைத்து, இப்பொழுது நமது நம்பிக்கையை கடைப்பிடிப்போம் என்று சொல்லி, சிறிது நீர் வாங்கி நெற்றியை கழுவி கொண்டார்.. இதனால் தான் சாதாரன ராமசாமி என்பவரை பெரியார் என்று எல்லோராலும் போற்றப்பட்டார்... அதே போல, ஒரு சமயம் பெரும் ஆண்மீகவாதியாக கவியோகி சுத்தாணந்த பாரதி அவர்களுக்கு ஈரோட்டில் பெரியார் வீட்டில் தங்க வேண்டிய நிலை.. கவியோகி அவர்கள் பூசைகளை விடாமல் கடைப்பிடிப்பவர் என்பதை பெரியார் நண்கு அறிவார்.. அதனால், கவியோகி அவர்களுக்கு தேவையான பூசை பொருட்களை உடணடியாக வாங்கி கொடுக்க செய்து, க்வியோகியின் நம்பிக்கையை காத்தார்...
அன்பு1 Years ago
"பெரியார் வாழ்க்கையில் இருந்து எத்தனையோ நாகரிகக் கதைகளைச் சொல்ல முடியும். அதனால்தான் அவர் பெரியார் ஆனார்!"-----------> பெரியோர் எல்லாம் பெரியரும் இலமே. சிறியோரெல்லாம் சிறியரும் இலமே.
அன்பு1 Years ago
"அம்பேத்கர் எழுதிய சட்டத்தை நிராகரிக்க முடியுமா?"-----------> என்னவோ அவர் மட்டும் உட்கார்ந்து பேப்பர் பேனாவை வைத்துக் கொண்டு யோசித்து எழுதியதுபோல் சொல்கிறீர்களே. அரசியல் சட்ட நிர்ணய சபை, சட்ட வரைவாக்கக் குழு என்று பல அங்கங்கள் இருந்தன. மேலும் அவர் பிரிட்ட்ஷ், அமெரிக்க அரசியல் சட்டங்களில் இருந்ததை ரீமிக்ஸ் செய்து, கொஞ்சம் பூசி புதிய பொம்மை போலக் கொடுத்தார். அதில் பல ஓட்டைகள். அதனால்தான் 120 அரசியல் சட்டத் திருத்தங்கள் 63 ஆண்டுகளில். வேறெந்த நாட்டிலும் இப்படி அவலம் இல்லை.
SUBRAMANIA RAO1 Years ago
ஒரு சமயம் நீடாமங்கலம் பாலகிருஷ்ண சாஸ்திரிகள் சங்கீத ராமாயணம் என்ற பிரவசனம், பெரியார் அவர்களின் பொதுக்கூட்ட மேடைக்கு அருகே நடந்தது. (பால கிருஷ்ண சாஸ்திரிகளிடம் பெரியார் அவர்களுக்கு நட்புடன்கூடிய மரியாதை உண்டு) பெரியார் அவர்களிடம் பிரவசனத்தை ஒத்தி வைக்கலாமா என கேட்கப் பட்டதற்கு அவர் நனி சிறந்த நாகரிகத்துடன் முதலில் பிரவசனம் முடித்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு என் பொதுக் கூட்டத்தை வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னதுடன் பிரவசனம் நடந்து முடியும் வரை பொறுமையாக காத்திருந்து பிறகு தனது பொதுக் கூட்டத்தை நடத்தியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.. இவர் ராமரை எதிர்த்தது கடவுளை நிந்திக்க அல்ல. அப்போதிருந்த கால கட்டத்தில் சனாதனிகளை எதிர்க்க ஒரு சிம்பாலிக்கான நடவடிக்கைதானே தவிர வேறு ஒன்றும் இல்லை.. இவர் அப்படி எதிர்ப்பு உணர்வு கொண்டவராக இருந்திருப்பின் இவர் பெயரே ராமசாமி அல்லவா அதை மாற்றிக்கொள்ள வில்லையே இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
SUBRAMANIA RAO1 Years ago
பாபா சாஹேப் அம்பேத்கார் அவர்கள் பொருளாதர கண்ணோட்டத்திலும் புரட்சிகரமான நூலை எழுதி இருக்கிறார் அதன் அடிப்படையில்தான் இந்திய ரூபாயின் மதிப்பு இன்றும் பேலன்ஸ் செய்து பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது (தி பிராப்ளம் ஆஃப் இந்தியன் ரூப்பி----என்பது அந்த வரைவின் பெயர்}.
  Displaying 1 - 25 of 55
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
18-ஏப்ரல் -2012
சென்ற இதழ்
15-ஏப்ரல் -2012

*Flip Version not supported in Devices