சாமி ரவி... காக்கு வீரன்... ஆளும் கட்சிப் பிரமுகர்கள்!
ராமஜெயம் கொலையாளிகளைத் தேடி பல்வேறு கோணங்களில் விசாரணை வலையை விரித்த திருச்சி போலீஸார், தற்போது தங்களது எல்லைகளைச் சுருக்கி ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்தும் கொடுத்து விசாரணையை நகர்த்தி வருகிறார்கள்! கிடுக்கிப்பிடியில் வங்கி அதிகாரி! 2007-ம் ஆண்டு வாக்கில் திருச்சி கன்டோன்மென்ட் ஏரியாவில் தனியார் வங்கி ஒன்றின் மேலாள ராகப் பணியாற்றிய கற்பூர சுந்தரபாண்டி யன் என்பவரைப் பிடித்து தனிப்படை போலீஸ் விசாரித்து வருகிறது. அவர் பணியில் இருந்தபோது உடன் பணியாற்றிய ரெட்டியார் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்திருக்கிறார். சிறிது நாளில் காதல் கசக்கவே, பஞ்சாயத்து ராமஜெயம் வசம் வந்திருக்கிறது. மனைவியிடம் மன்னிப்புக் கேட்கச்சொல்லி, விவாகரத்தும் பெற்றுத் தந்திருக்கிறார். பின்னர், அந்தப் பெண் டெல்லிக்குச் சென்று செட்டிலாகி விட்டாராம். மீண்டும் 2008-ம் ஆண்டு. . .