மிஸ்டர் கழுகு: முன்னே... ஜெ. பின்னே... மு.க.
''ஜெயலலிதாவின்கார் அணிவகுப்பில் கருணாநிதியின் கார் சேர்ந்து வந்தால் எப்படி இருக்கும்?'' - குறும்பாகக் கேட்டார் கழுகார் ''கற்பனை நிஜம் ஆகாது'' என்றோம். ''நிஜம்தான் சொல்கிறேன்'' - சிரித்தார் மீண்டும். ''அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, கடந்த 10-ம் தேதி முதன்முறையாக சட்டசபைக்கு வந்தார் கருணாநிதி. வழக்கம் போல கையெழுத்துப் போட்டுச் சென்றுவிட்டார்! எம்.எல்.ஏ-வாக ஆனதும் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்டதோடு சரி. அன்றுமுதல் அவை நடவடிக்கைகளில் கருணாநிதி கலந்துகொள்ளவே இல்லை. ஆனால், விஷயம் அதில் இல்லை. கருணாநிதி கையெழுத்துப் போட வந்தபோது ஆச்சர்யமான சில சம்பவங்கள் நடந்தன. சட்டசபைக்குள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நுழைவதற்காக தனியாக ஒரு வாசல் உண்டு. அந்த வாசல் அருகே இருக்கும் போர்டிகோவில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் கார் வந்து நிற்கும். இந்த போர்டிகோவுக்கு மிகவும் அருகில். . .