அண்ணாச்சியை அமுக்க, மகனை வளைத்த போலீஸ்!
இதுவரை தி.மு.க-வின் எத்தனையோ முன்னாள் அமைச்சர்கள் கைதாகி வெளியே வந்துள்ளார்கள். கிட்டத்தட்ட எல்லோருமே நில அபகரிப்புப் பிரிவில்தான் வளைக்கப்பட்டனர். ஆனால், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கைதாகி இருப்பது, ஒரு கொலை வழக்கில். அதுவும் அவரே முன்வந்து சரண் அடையும் அளவுக்கு, போலீஸார் தங்கள் வலையை இறுக்கமாகப் பின்னிவிட்டனர். போஸ்ட் மாஸ்டர் லட்சுமணன் கொலை விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி கைது செய்ய, போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதைக் கடந்த ஜூ.வி. இதழில் (மதுரை மண்டலம் மட்டும்) 'கொலையாளியைக் காப்பாற்றினாரா முன்னாள் அமைச்சர்?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த இதழ், புதன்கிழமை விற்பனைக்கு வரும் முன்னரே, அவரைக் கைது செய்து விட்டது விருதுநகர் போலீஸ். தி.மு.க., அ.தி.மு.க.எந்தக் கட்சி தமிழ்நாட்டை ஆண்டாலும். . .