சீனா விரிக்கும் 'தொடர்பு' வலை! பீரங்கி கொண்டு எதிரி நாட்டைத் தகர்ப்பது பழைய பாணி. இப்போதெல்லாம் பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தி அஸ்திவாரத்தை ஆடச் செய்வதுதான் நவீன யுத்த முறை! அந்த வகையில், இந்தியாவிடம் அடிக்கடி உறுமிக்கொண்டிருக்கும் சீனா ஒரு 'தொடர்பு’ வலை விரித்திருப்பதாக எச்சரிக்கிறது 'ரா’ புலனாய்வு அமைப்பு. சீன தேசத்தின் அரசு வங்கி கடந்த ஆண்டு ஆர்.காம் (ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்) நிறுவனத்திற்கு 600 மில்லியன் டாலரை குறைந்த வட்டிக்கு கடனாகத் தந்தது. அதோடு, ஆர்.காமிற்குத் தேவையான இயந்திரங்களை சீனாவின் ஹாவய் நிறுவனத்தின் மூலம் தர 'கரிசனத்தோடு' ஒப்புக்கொண்டது. 'சீனாவின் இந்த நவீன இயந்திரங்களை இந்தியாவுக்குள் எதை நம்பி அனுமதிப்பது? இதனால் நாட்டின் ரகசியங்களும் பாதுகாப்பும் சீனாவின் கையில் சிக்கும் ஆபத்து ஏற்படாதா?' என்கிற கேள்வியை இந்திய. . .