தகவல் இல்லாம இந்த உலகத்துல வாழ முடியாது. அதனாலதான், 'தகவல் பெறும் உரிமைச் சட்ட'த்தை அரசாங்கமே கொண்டு வந்திருக்கு. அதுவும் நம்மள மாதிரி விவசாயிங்க, இந்தச் சட்டத்தைப் பத்தி கட்டாயம் தெரிஞ்சு வெச்சுக்கணும். மின்சார இணைப்பு கிடைக்கறதுல காலதாமதம்; வேளாண்மைத் துறை திட்டம்; கால்நடை வளர்ப்புக்குக் கடனுதவி?னு சகலத்துக்கும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தலாம். எந்த அலுவலகத்துல, என்ன தகவல் தேவையோ, அந்த அலுவலகத்துல இருக்கிற உயர்அதிகாரிக்கு, தமிழ் மொழியிலயே விண்ணப்பத்தை எழுதி கொடுக்கலாம். மறந்துடாம, விண்ணப்பப் படிவத்துல 10 ரூபாய் கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் ஒட்டிடுங்க. நீங்க தெரிஞ்சுக்க விரும்பற தகவல்கள... தெளிவா, கேள்வி வடிவத்துல எழுதி, பதிவுத் தபால் மூலமா அனுப்புறது நல்லது. உங்கள் விண்ணப்பம் கிடைச்ச 30 நாளுக்குள்ள பதில் வந்து சேர்ந்துடும். அப்படி. . .