இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்படும் டர்ட் ரேஸ் - கல்ஃப் நேஷனல் சாம்பியன்ஷிப் மற்றும் எம்.ஆர்.எஃப். சூப்பர் கிராஸ் ஆகிய இரண்டும் தான். இதில், கல்ஃப் நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டு முறை வென்றிருக்கும் ஒரே தமிழர், கோவையைச் சேர்ந்த ஆனந்த்! கோவை போத்தனூர் அருகிலிருக்கும் ஆனந்த்தின் வீட்டில் அவரைச் சந்தித்தேன். டர்ட் ரேஸில் நெடுங்காலமாக வெற்றிகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதன் ஆதாரமாக, அறையெங்கும் வியாபித்திருக்கும் ட்ராஃபிகளை வருடியபடி பேச ஆரம்பித்தவர், ''எல்லா பசங்களை மாதிரியே சின்ன வயசுல இருந்தே எனக்கும் பைக்ஸ் மேலே காதல் உண்டு. டீன்-ஏஜ் தொட்ட சமயத்துல ஃப்ரெண்ட்ஸோட ஃபீவர் தொத்திக்கிட்டதால, பைக் ஸ்டன்ட் பண்றதுல ரொம்ப ஈடுபாடா இருந்தேன். ஆனா, நான் டர்ட் ரேஸுக்குள்ளே வந்தது 2003-ல்தான். சொன்னா நம்பமாட்டீங்க! பக்கத்துல உள்ள. . .