அயோத்தி- கல்வியில் சிறந்த மாநகரம் எனச் சிறப்பிக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். ஏகம் முதற்கல்வி முளைத் தெழுந் தெண் ணில்கேள்வி ஆகும் முதல் திண் பணைபோக்கி அருந்த வத்தின் சாகம் தழைத்(து) அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து போகம் கனியன்று பழுத்தது போலு மன்றே அதாவது, கல்வி எனும் விதையில் முளைத்த விருட்சம், எண்ணற்ற கேள்விகள் மற்றும் ஆராய்ச்சிகள் எனும் கிளைகளைப் பரப்பி நின்றது. அந்தக் கிளைகளில் தவமும் ஒழுக்கமும் இலைகளாகத் துளிர்த்தன. அன்பும் அரும்பியது. அந்த அன்பில் இருந்து தருமம் மலர்ந்தது. தரும மலர் காய்த்து... போகம் அல்லது இன்ப வாழ்வாகக் கனிந்தது. அயோத்தி மக்கள் அதைப் புசித்து மகிழ்ந்தனர் எனச் சுவைபடக் கூறுகிறார் கம்பர். கல்வியால் கிடைக்கும் பலனை விவரித்து, அந்தப் பலனை முழுமையாக அனுபவிக்கும் மக்கள் நிறைந்த நகரம் என. . .