தேசிய தண்ணீர் கொள்ளை கொள்கை - 2012
சாட்டை நிலத்தடி நீர் இலவசமாகக் கிடைப்பதால்தான், அதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. நீர் இலவசப் பொருளல்ல. அது ஒரு வணிகப் பொருள். உரிய விலை கொடுத்துத்தான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதை தனியார் வசமோ அல்லது தனியாரோடு கூட்டுச் சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலத்தடி நீர் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட, தேசிய நீர் கொள்கை|2012 வடிவமைக்கப்படுகிறது'' - இந்தியத் தலைநகர் டெல்லியில், சமீபத்தில் நடைபெற 'தேசிய தண்ணீர் வார விழா'வைத் துவக்கி வைத்த கையோடு, 'தேசிய தண்ணீர் கொள்கை|2012' என்கிற கையேட்டையும் வெளியிட்டு, பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வார்த்தைகள்தான் இவை! பிரதமர் கூறியிருப்பதை மேலோட்டமாக பார்த்தால்... 'அட, என்னவொரு. . .