தொழிலதிபர் ஒருவரும் அவரது மனைவியும் தங்கள் மகளை அழைத்துக்கொண்டு புனித யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். வழியில் சிவன் கோயில் ஒன்றைப் பார்த்த அந்தத் தொழிலதிபர், சிவபெருமானை அர்ச்சிக்க கொஞ்சம் வில்வ இலைகளும், ஊமத்தம்பூவும் வாங்கிக்கொண்டு வந்தார். அங்கே தரிசனம் முடித்த பிறகு, மூவரும் ஒரு விஷ்ணு கோயிலுக்குப் போனார்கள். 'விஷ்ணுவுக்குக் கொஞ்சம் துளசி வாங்கிக்கொண்டு போவோம்!' என்றாள் அம்மா. அப்படியே செய்தனர். அடுத்ததாக, அவர்கள் ஒரு காளி கோயிலுக்குப் போனார்கள். மகளிடம் வேப்பிலையும், எலுமிச்சம் பழமும் சமர்ப்பிக்கச் சொன்னார் தந்தை. மகளும் அவ்வாறே செய்தாள். தொடர்ந்து, அவர்கள் ஓர் ஆஞ்சநேயர் கோயிலை அடைந்தார்கள். அங்கே, நல்லெண்ணெய் வாங்கி வந்து வைத்துத் தொழுவதே முறை என்றாள் அம்மா. தந்தையும் அப்படியே செய்தார். மகளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. 'அப்பா,. . .