சுயம்புவாக தோன்றிய யோக நரசிம்மர்!
திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் செல்லும் வழியில் உள்ள ஊர் ஆலங்குப்பம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது முன்னூர். முன்னூற்று என்ற பெயரே நாளடைவில் முன்னூர் என்று மருவியதாம். இங்கே ஸ்ரீதேவி- பூதேவி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅருளாளப் பெருமாள். முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட நல்லியக்கோடன் எனும் மன்னனின் வேண்டுதலுக்கு இரங்கி, அவனது ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்தைக் களையும் பொருட்டு அவனுக்கு நேரடியாக அருளியவர் என்பதால் இப்படியரு திருப்பெயராம். மேற்கு நோக்கி அருளும் ஸ்வாமியை, அரவத்தை அணிகலனாகக் கொண்ட கருடாழ்வார் வணங்குவது போன்ற அமைப்பு, இந்தத் தலத்தின் சிறப்பு. இங்கே தனிச்சந்நிதியில் யோக பீடத்தில் சுயம்புவாக அருள்புரியும் ஸ்ரீயோக நரசிம்மரும் சிறந்த வரப்ரசாதி. பொக்லைன் இயந்திரத்தின் மூலம் கோயில் திருப்பணிகள் நடந்த வேளையில்,. . .