திட்டமிட்டால் திகட்டாத இன்பம்...
பட்ஜெட் போட்டு செலவு செய்வது முக்கியமான விஷயம். அதற்காக மெனக்கெட வேண்டுமா என பலரும் சோம்பல்படுவது இயற்கையான விஷயம்தான். ஆனால், ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்றார்கள் நம் முன்னோர்கள். இதன் அர்த்தம், செலவே செய்யக்கூடாது என்பதல்ல. தேவையறிந்து செலவழிக்க வேண்டும் என்பதே. எவர் ஒருவர் செலவு செய்வதைக் கச்சிதமாக எழுதி வைக்கிறாரோ, அவரிடம் மற்றவர்களைக் காட்டிலும் பணம் சற்று கூடுதலாகத்தான் இருக்கும். வீட்டு பட்ஜெட்டை எப்படி போடுவது? என்பதை விளக்கமாகச் சொல்லித் தந்ததோடு, அதற்கான மாதிரிப் படிவத்தையும் தயார் செய்து தந்தார் நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷ். இனி ஓவர் டு சுபாஷ். ''இன்றைய தலைமுறையினர் களில் பெரும்பாலானவர்கள், தான் வேலை செய்யும் அலுவலகத்தைச் சரியாக நிர்வாகம் செய்கிறார்களே தவிர, வீட்டு நிர்வாகத்தை முறையாகச் செய்வது இல்லை. பட்ஜெட் போடாமல் செலவு செய்து விட்டு, மாத இறுதி நாட்களிலோ அல்லது முக்கிய தேவைகள் வரும்போதோ பணம் இல்லாமல் திண்டாடுவதால் எந்த பயனும். . .