''10 ஐ.ஏ.எஸ்ஸுக்குப் பிறகுதான் அன்புமணி கையெழுத்துப் போட்டார்!''
அன்புமணி ராமதாஸுக்கு அடுத்த சிக்கல் சி.பி.ஐ. வடிவில் வந்துள்ளது. அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டில் நடந்த முருகானந்தம் கொலை வழக்கில் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகிய இருவரின் பெயர்களும் அடிபட்டன. ராமதாஸின் தம்பி சீனிவாசன் உள்ளிட்ட 17 பேரைக் கைது செய்த சி.பி.ஐ., செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முதலாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. 'இரண்டாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய இருக்கிறோம்’ என்றும் செக் வைத்துள்ளது. இந்த நிலையில்... டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகை ஒன்றில், அன்புமணி பெயர் இடம் பெறவே, பா.ம.க. வட்டாரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. என்ன பிரச்னை? டெல்லி சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தோம். ''மத்திய அரசில் கடந்த ஆட்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி ராமதாஸ். 2008-ம். . .