தமிழர்களை வெளியேற்ற 'மூன்று அம்சத் திட்டம்'?
முல்லைப் பெரியாறு குறித்த இறுதி அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள, தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை ஆகிய பகுதிகளுக்கு விசிட் அடித்தோம். மூன்று வகையான சிக்கல்களில் தமிழர்கள் சிக்கித் தவிப்பதை உணர முடிந்தது. ஒன்று: மறுக்கப்படும் உரிமைகள் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கேரள மாநிலச் செயலாளரான வெள்ளத்துரை பாண்டி இதுபற்றி நம்மிடம் பேசினார். ''முல்லைப் பெரியாறு விவகாரத்துக்குப் பிறகு, தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தத் தொடங்கி விட்டது கேரள அரசு. 200 வருடங்களுக்கும் மேலாக, இன்னும் சொல்லப்போனால் கேரள மாநிலம் உருவாகும் முன்னரே, இங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். வருவாய் அலுவலகங்களில் பிள்ளைகளின் படிப்புக்காகவும், உயர்கல்வி பெறவும் நிரந்தரக் குடியிருப்புச் சான்றிதழ் கேட்டால்,. . .
என் கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்,ஆனால் விமர்சிக்கும் முன் உணர்ச்சிவசப்படாமல் என் கருத்தில் உள்ள உண்மையை சிந்திக்கவும்.