என் கடவுள் நித்தியானந்தர்!
''நான் தப்பு பண்ணி இருந்தால், தைரியமா மீண்டும் பரமஹம்சரைப் பார்க்கப் போயிருக்க முடியுமா? தொடர்ந்து அவரது பக்தை யாக இருந்திருக்க முடியுமா? எங்க குடும்பத்துல இருக்கிறவங்கதான் அனுமதிச்சு இருப்பாங்களா? நான் வணங்கும் கடவுள் மீது ஆணையாகச் சொல்றேன்... நான் எந்தத் தப்பும் பண்ணலை. என் மடியில் கனம் இல்லை. அதனால, வழியில் எந்தப் பயமும் இல்லாமல் என் பயணத்தைத் தொடர்ந்துட்டு இருக்கேன்.'' இரு மாநிலங்களிலும் அதிர்வைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் விவகாரத் தின் சின்ன வைப்ரேஷன்கூட இல்லாமல் இயல்பாக,சாந்த மாக இருக்கிறார் ரஞ்சிதா. ''எந்தக் கேள்விக்கும் மழுப்ப லாகப் பதில் சொல்ல மாட் டேன்... என்ன கேக்கணுமோ, கேளுங்க...'' - இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்துகொள்கிறார். ''மதுரை ஆதீனமாக நித்தியானந்தரை நியமித்து இருப்பதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?'' ''292-வது. . .