இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!
இந்த ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகளில் முத்திரை பதித்து இருக்கிறார்கள் தமிழர்கள். பளிச் சாதனைக்குப் பின்னிருக்கும் உழைப்பு மற்றும் களைப்பை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் சிலர்... ராஜராஜேஸ்வரி: சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் படித்து முதல்முயற்சியிலேயே இலக்கு தொட்டிருக்கிறார் ராஜராஜேஸ்வரி. ''கோவை வேளாண் கல்லூரியில் ரெண்டு வருஷம் முன்னாடி தான் பட்டப் படிப்பு முடிச்சேன். பேப்பர் படிச்சுட்டு பொது அறிவு மற்றும் நாட்டு நடப்பு சம்பந்தமான விஷயங்களை அப்பா - அம்மாவோட விவாதிப்பேன். அந்த விவாதங்கள் எந்தவொரு விஷயத்தையும் ஆதரிக்க அல்லது எதிர்ப்பதற் கான காரணங்களை அலசும் பழக்கத்தைக் கொடுத்துச்சு. பிரமாதமான ஆங்கிலப் புலமை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோட சொல்ல வேண்டிய விஷயத்தைப் பளிச்சுனு சொல்ற அளவுக்கு ஆங்கிலத்தைக் கத்துக்கிட் டேன். முதல்முயற்சியிலேயே 556-வது ரேங்க். இப்போ எனக்கு 23 வயசுதான் ஆகுது. அதனால, இன்னொரு முறை இந்தத் தேர்வை எழுதி இன்னும் உயரம் தொடணும். ஆங்கிலப் புலமை இருந்தாதான் இந்தத். . .