# கிரிக்கெட் சூதாட்டம்: மும்பையில் மேலும் ஒரு புக்கி கைது; ஸ்ரீசாந்த் லேப்டாப் பறிமுதல் # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # தொடங்கியது தென்மேற்கு பருவமழை # ஒபாமா அழைப்பு: அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங் # சென்னையில் மேலும் 10 கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுக்கு வலை # 24 ம் தேதி ஸ்ரீரங்கம் செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் # ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அதிகாரி கைது # 28 புதிய அமைச்சர்களுடன் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் # ஒரு வாட்டர் கேன் 100 ரூபாய்க்கு விற்பனை: பொதுமக்கள் கடும் பாதிப்பு # 'பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் நடத்தையை காரணம் காட்டி குற்றவாளி தப்ப முடியாது' # வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ஹம்மர் காரை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார் உதயநிதி ஸ்டாலின் # ஸ்டாலின் கூட்டத்தில் அழகிரி! - மாறுமா மதுரை மல்லுக்கட்டு? # எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார் சஞ்சய் தத் # கடலூரில் சீமான் கூட்டத்துக்கு தமிழக அரசு திடீர் தடை #


Comment count33
save
print A+     A-
குடும்ப வன்முறை... குமுறும் பெண்மை

மாலினிக்கு 20 வயது. திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் கர்ப்பிணி ஆனாள். பேறுகாலக் கவனம் செலுத்த வேண்டிய கணவனோ இன்னொரு பெண்ணைவீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார். கர்ப்பக் காலத்தில் சத்தான காய்கறிகள், உணவு வகை களைச் சாப்பிடவேண்டிய மாலினிக்கு, ஒரு டம்ளர் பால்கூடத் தரப்படவில்லை. செலவுக்குப் பணமும் தராமல் தேவைகளையும் கவனிக்கவில்லை. மாலினியின் நிலைமை என்ன ஆகும்?    வேலைக்குச் செல்லும் கீதா பகல் முழுக்க அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்த பின் ஓய்வைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியாது. வீட்டு வேலைகள் மலையெனக் குவிந்துகிடக்கும். கணவர் வருவதற்குள் வீட்டைச் சுத்தப்படுத்தவில்லை என்றால் கன்னத்தில் பொளேரென விழும் அறையில் தொடங்கி, சுவரில் தலையை மோதி உடைக்கும் அளவுக்குக் கொடுமை இருக்கும். கீதாவுக்கு எப்போதுதான் விடிவுக்காலம்?. . .

இதை முழுமையாக படிக்க இங்கே Login செய்க

Click here to Register Free

[ Top ]
naresh kumaar12 Months ago
Well Said AAR. I have to quote that my cousin's husband went through what these women went through in his life. Her daughter supported her mother. I am very sorry I believe, no men can win an arguement with women- That is the reason some of the frustrated men raise their arms- I am not supporting this, but does it mean that the men do not have affection and love for their children?
ஆட்டோகாரன்12 Months ago
தன் கணவனை எல்லோரும் மனைவிகளும் குறை சொல்கிறார்கள். ஆனால் தன் தந்தையையோ, தன் சகோதரனையோ குறை சொல்பவர்கள் மிகக் குறைவு. ஆனால் அவர்களை அவர்களின் மனைவிமார்கள் குறை சொல்கிறார்கள்.

ஆண்களை குறை சொல்லும் எத்தனை பெண்கள் தங்கள் மகனை, ஒரு பெண்னை மதிக்கும் படி வளர்க்கிறார்கள். தாய் ஒரு பெண் தான். ஆனால் அவர்கள் தன் மகன் தன் மருமகளினால் (அவளும் ஒரு பெண்தான்..) கஸ்டப்படுவதாக நினைப்பது எதனால்? எனக்கு எதுவும் புரியல.
Shoba12 Months ago
This article is about the sufferings of women. this does not say that sometimes men are victims of sharp words from women in the family. In a relationship, both the parties have to respect each other and communicate with each other. We have a added complication of the immediate family involved in the husband and wife relationship. All the insecurities and ignorance manifest in different ways in man and a woman..Respect and love..otherwise these heart wrenching lives of women and men will continue..
திருச்சிக்காரன்1 Years ago
பெண்கள் சுலபத்தில் அழுது கழிவிரக்கம் சம்பாரித்துக் கொள்கிறார்கள். மேற்சொன்ன நிகழ்வுகள் எல்லாம், 1000த்தில் 5 குடும்பங்களில் நடந்திருக்கலாம். ஆனால் பொருந்தாத மனைவியோடு ஊருக்கும், உறவுகளுக்கும், குழந்தைகளுக்காகவும் பயந்து விருப்பமின்றி வாழ்வோர் எத்தனை எத்தனை ஆண்கள்..??? அவர்கள் யாரும் வெளியே சொல்லாமல், டாஸ்மாக் கடைகளில் விழுந்து அதை மறப்பதால் வெளியே தெரியவில்லை.
Srinivasan12 Months ago
திருமண பந்தத்தில் ஆண்களுக்கும் வெளியில் சொல்ல இயலாத எத்தனையோ துயர்கள் இருக்கின்றன என்பதை இந்த உலகம் அறியுமா? அவர்களுக்கு விடிவு ஏதும் உண்டா?
sainathan12 Months ago
In most of the families in India there are two sets of rules. The mother-in-law ill treats her daughter-in-law where as she wants her daughter to have a happy married life. That is why some families choose grooms who do not have mothers. There should be public awakening. Girls are not inferior to boys. Girls should know their rights and there should be severe punishment for ill treatment if it is proved.
முஹம்மது ரஸ்வி12 Months ago
பெண்களுக்கு பாதுக்காப்பு அளிக்கும் சட்டம் ஆண்கள் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு இல்லையே என்று ஏங்கும் வாசக கருத்தாளர்களே! பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படுவது அதிகமா? அல்லது ஆண்களால் பெண்கள் பாதிக்கப்படுவது அதிகமா?. உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். சட்டத்தை தவறாக பயன்படுத்துவது உண்டுதான். என்னமோ இந்த பெண்கள் ஆண்களை பழிவாங்குவதற்காக மட்டுமே இந்த சட்டத்தை பயன்படுத்துவதை போன்ற தோற்றத்தை உருவாக்காதீர்கள். நாம் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் சட்டத்தை ஏமாற்றவே செய்திருக்கிறோம். யாராவது மறுக்க முடியுமா? நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் கொடுமைபடுத்தும் கணவருக்கு மட்டுமல்ல அந்த வீட்டில் யாரால் பாதிக்கப்பட்டாலும் நடவடிக்கை எடுக்க இயலும். தவறாக பயன்படுத்தப்பட்டால் தண்டனையை கடுமையாக்க வேண்டும்.
AAR1 Years ago
1. Any law is open to abuse in India.
2. Implementer of the law would be a Govt employee or Police - are they not greedy and arrogant. Have any of us faced good treatment in Govt office or police station.
3. Advocates mess up the issue and stretch it for years to increase their fees.
4. Better to resolve family issues through friends and relatives. If no compromise, separate on mutual consent.
5. Never go to Govt office or police station or court - waste of time and money.
Murugapandian12 Months ago
இவ்வளவு பெரிய பெரிய பிரச்சினைகளை வெளிக்கொண்டுவந்ததற்கு நன்றி. இவற்றின் எண்ணிக்கையை மிஞ்சும் அளவிற்கு குடும்ப வன்முறை சட்டம் இந்தியா முழுதும் தாண்டவமாடுகிறது. நல்ல சட்டத்தை பிடிவாத குரங்குகளும் குருட்டு அதிகாரிகளும் பயன்படுத்துவதால் பலரது குடும்பம் கெடுகிறது.
Deepa12 Months ago
சுரேஷ்,பக்ரைனிலிருந்து, பெண்ணியத்திற்க்கு எதிரான கொடுமைகளை வன்மையாக கண்டிப்பவன் நான்.., பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை வெறுப்பவர்கள் அவருடைய பெண்ணினத்திற்கான விடுதலை பற்றிய சிந்தனைகளை ஆழ்ந்து படிப்பதில்லை. பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளாராக மட்டுமே பார்க்கப்பட்டார் அதனாலேயே சிலரால் வெறுக்கப்பட்டார் ஆனால் அவரின் பெண்ணின விடுதலை சிந்தனை என்பது ஈடில்லாதது.., எங்கள் பெற்றோருக்கு நாங்கள் 3 ஆண் பிள்ளைகள்.., நாங்கள் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது.., ஒரு பெண்ணாய் பிறந்து என் தாய் என் தந்தையிடம் பட்ட கஷ்டங்களே எங்களுக்கு பாடம்.., ஆம் எங்களுக்கு திருமணமாகி எனக்கும் என் மூத்த சகோதரருக்கும் பெண் குழந்தைகள் மொத்தம் மூன்று.., ஆண் குழந்தை இல்லை என்கிற வருத்தம் எங்களுக்கு துளியும் இல்லை.., என் தம்பிக்கு திருமணம் நடந்தது.., நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை அவனுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது எங்களுக்கு மகிழ்ச்சியே.., ஆனால் என் தம்பி அவன் மனைவியுடன் வாழ்ந்தது 3 மாதங்கள் மட்டுமே.., ஆம் மானம் மரியாதைக்கு அஞ்சுகிற மனசாட்சியே தெய்வம் என்று எண்ணுகிற பெருன்பான்மை சமூகமான நடுத்தர குடும்பமான எங்களுக்கு எங்கள் தம்பி மனைவியின் குடும்பம் ஏற்படுத்திய அதிர்ச்சிகள் மிக அதிகம்.., குறைகள் இல்லாத என் தம்பியுடன் தினம் தினம் பிரசினை.., ஒரு நாள் வீட்டை விட்டு அந்த பெண் வெளியேறி அவர் தாயாருடன் போய்விட்டார் அதன் பின் நாங்கள் கால்கள் தேய தேய போய் பேசி பார்த்தோம் ஆனால் பயன் இல்லை.., மெதுவாய் அவர்களின் குணம் அறிந்தோம்.., ஆம் அக்குடும்பம் வாழ்வதற்காக வரவில்லை.., பணம் செய்யவே திருமணம்.., என் தம்பியை போலீஸ் நிலையத்தில் வைத்தார்கள்.., கோர்ட்டிற்க்கு கொண்டு சென்றார்கள்.., எங்கள் அம்மா மீது மாமியார் கொடுமை.., மாமனார் மீதும் கொடுமை புகார்.., என் மீது கொலை புகார் ஆனால் நான் வாழ்வது பக்ரைனிலில்.., என் அண்ணன் மீது கொலை புகார்.., அக்கம்பக்கத்தினர் எங்கள் குடும்பத்தை பற்றி அறிந்தவர்கள் அதனால் போலீசில் எங்கள் பக்க நியாயம் வென்றது.., ஆனால் கமிஷனர் ஆபீஸ் ஒருநாள், மகளிர் ஆணையம் ஒருநாள் என்று அவர்கள் எல்லா வழியையும் தவறாக பயன்படுத்தினர்.., என் தம்பி என்பதற்காக சொல்லவில்லை அவன் சிறு தீங்கும் யாருக்கும் இழைக்காதவன் அவன் மீது பொய்யான புகார்கள்.., கடைசியில் 15 லட்சம் நாங்கள் வரதட்சணை கேட்டோம் என்கிற புகார்..? இப்போது கடந்த 3 வருடமாக என் தம்பி சென்னை உயர்நீதி மன்றத்திற்கு அலைகிறான் வழக்கு நடக்கிறது.., ஆனால் அந்த பெண் சரியாக வருவதில்லை.., இருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆனால் எங்கள் கவலை எல்லாம் எங்களுடன் உள்ள எங்கள் 3 பெண் குழந்தைகள் நன்றாக படித்து வளர்க்கிறார்கள் ஆனால் அந்த பெண்ணிடம் உள்ள எங்கள் தம்பியின் பெண் குழந்தையின் நலன் எப்படி அமையும் என்பது தான்? ஆம் பெருன்பான்மை பெண்கள் "குடும்ப வன்முறைக்க்கு" பலியாகிறார்கள் அதே வேளையில் சில பெண்கள் சட்டத்தின் உதவியுடன் சில குடும்பங்களையே பலியாக்குகிறார்கள்..,ஆம் என் தம்பியின் வாழ்க்கை அழிய ஒரு பெண்ணின் ஆடம்பரமும் ஆணவமும் குரூரமுமே காரணம்.., இதற்கான நீதியை ஆண் சமூகம் எங்கே போய் கேட்கும்..?
விஜய் பெரியசாமி1 Years ago
மாற்றம் வேண்டும் , அனைவரின் மனதிலும்.
Senthil1 Years ago
Similarly Vikatan should publish an article on Men Sufferings...As most of the men never open out their problems even to their close people it is never becoming public
vinod1 Years ago
இப்படி எல்லாத் தரப்புப் பெண் களையும் விட்டுவைக்காத இந்த குடும்ப வன்முறைக்கு என்ன காரணம்?--- உண்மையில் சொல்லப்போனால் வக்கிரம் இரண்டு பக்கமும் இருக்கிறது. பெண்கள் உடனே பிலாக்கணம் வைக்கத்துவங்குகின்றனர். ஆண்கள் இதை வெளியே சொல்ல வெட்கபப்ட்டு உள்ளுக்குள் வெதும்புகிறான். எனக்கு தெரிந்த பல குடும்பங்களில் பெண் ஆணை கொடுமை படுத்துவதே அதிகமாக இருக்கிறது. இன்று பாரதி இருந்திருந்தால் ஆண் பற்றி பரிதாபப்பட்டு பாடியிருப்பான்.
Senthil1 Years ago
தாய் தன் மகனை வளர்க்கும் காலத்தில் அவன் பெண்ணைவிட மேல் என்ற எண்ணத்தை உருவாக்குகிறாள்.
ஒரே உதாரணம், மகன் அழுதால் "என்ன பொண்ணு மாதிரி அழற!" என்று கூறுவதும் ஒரி தாய்தான்.
Sreeram1 Years ago
பெண்களுக்கு இன்னுமொரு ஆயுதம். அப்பாவி கணவனையும் கணவன் வீட்டாரையும் மிரட்டுவதற்கு நன்கு உபயோகப் படும்.
A.1 Years ago
மலர்களுக்காக மலர்கள் ஏன் அழியவேண்டும். துரோகியின் மலர்களை உருவாக்குவதைவிட தனியே வாழ்ந்து காட்டுங்கள்.
MANI1 Years ago
வார்த்தைகளிலே பலம் இருக்கும் போது, அர்த்தம் இருக்கும் போது மாடல்கள் எதற்கு?
Hari1 Years ago
பல சமயங்களில் இந்த மாதிரி வன்முறைகள் ஏற்படுவதருக்கு வீட்டில் உள்ள மற்ற பெண்களும் காரணமாகி போகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
ஏனோ கணவனை அடிக்க தூண்டும் வாக்குவாதங்கள் பெரும்பாலும் மற்றொரு பெண்ணை பற்றியதாகவே இருந்து வருகிறது. இங்கு ஆணுக்கும் பேச்சால் சமாளிக்கும்
திறனும் , குடும்பத்தை நிர்வாகிர திறனோ போதிய அளவில் இல்லாமல் இருப்பது இன்னொரு நிஜம். இதற்கு எனக்கு தெரிந்த வரையில் பள்ளி பாடங்களில் குடும்பங்களும் உறவுகளும் என்று தனியொரு பாடபிரிவனை வைத்தால் அடுத்து வரும் சமூகம் மனரீதியான மாற்றங்களை வகுத்து கொள்ள உதவும். இல்லை என்றால் எந்த சூழ்நிலையில் குழந்தைகள் வளர்கிரர்களோ , அதற்கு ஏற்பதான் எதிர் காலத்தில் குடும்பம் நடத்துவார்கள். அவர்களுக்கு சரியான வாழ்கை முறை எதுவென்று கடைசி வரை தெரியாமல் , பின் வரும் சங்கதியினருக்கும் தவறான உதாரணமாக இருப்பார்கள்.கலை, சியாட்டில்
தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்1 Years ago
த லாஸ்ட் லைன் டிஸ்டர்பிங்... உண்மையில் பெண்களைக் காக்கவில்லை எனில் நல்ல தலைமுறை என்றுமே உருவாகாது.
Em1 Years ago
பெண்ணை மதிக்கும்படி ஒரு ஆண் வளர்வது இன்னொரு பெண்ணின் கையிலேயே இருக்கிறது. அப்படி பெண்ணை மதிக்காத துன்புறுத்தும் ஆண் இருப்பது அவனை வளர்த்த இன்னொரு பெண்ணின் குற்றமே. என்ன அதற்கான தண்டனையாக மற்றொரு பெண் அவதிக்குள்ளாவதுதான் பெரிய சோகம். எனவே இன்றைய தாய்மார்களாவது தங்களின் ஆண் குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டியாக இருந்து நல்ல முறையில் வளர்க்க முயல வேண்டும்.
usha1 Years ago
என்ன செய்வேன் அவனைப் பிரிந்து? பொருளாதாரமின்றி என் குழந்தை களை எப்படிக் காப்பேன்? நான் அஞ்சு கிறேன்... விலக எண்ணுகிறேன்......இதுதான் பெண்கள் சகித்து கொண்டு வாழ்வதற்கு முதல் காரணம்..நான் அவனைப் பிரியும் வலுவூள்ளவளாக இருந்திருந்தால்... .அந்த வலு ஜீ..பூம்பா இல்லை,இந்த சமூகம் கொடுக்க வேண்டும்,காயப்பட்ட பெண்ணிற்கு குடும்பம்,சுற்றம் எல்லாம் மேலும் மன வேதனையைத்தான் கொடுக்கிறது..இந்த உதவி நம்பரை பாதிப்படைந்த பெண்களுக்கு ஊடகங்கள் கொண்டு சேர்க்க வேண்டும்......
sundar1 Years ago
Male chauvinism is an age old topic. The other gender's atrocities are the latest. Which man will come forward to tell that.

Similarly in schools also things have changed. Boys behave better and girls have become rogues. Talk to the teacher community. They will tell you.

Females have become gutsy.
Kalpana1 Years ago
ஒருதலை பட்சமாக எழுதப்பட்ட கட்டுரைக்கு திருச்சிக்காரனும், பிரபாகரனும் எழுதியிருக்கும் பின்னூட்டங்களுக்கு சபாஷ். வாழ்த்துக்கள். என்னவோ இந்திய திருமண அமைப்பில் பெண்கள் மட்டுமே புழுங்குவதாகவும், அபலைகளாக்கப்படுவதாகவும், வன்முறைக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் எழுதியிருப்பது அசிங்கத்திலும் அசிங்கம். இந்திய திருமண அமைப்பே குழந்தைகள் பெற்றுக்கொள்ள அடையாள உரிமம் வழங்கும், சொந்தபந்தங்கள் தின்று களிப்பதுடன் வாழ்க்கைமுறைகளால் பந்தாடப்படும் நிலைக்கு தள்ளப்படும் ஒரு விசேஷ அமைப்பு. இதில் என்ன புனிதம் இருக்கின்றது என்பதினை மனநல ஆய்வாளர்கள்தாம் சொல்லவேண்டும். இந்த லட்சணத்தில் பெண்கள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகுகின்றனராம். அப்பொது ஆண்கள்? அவர்கள் என்ன எந்த கருத்து சுதந்திரம் இல்லாத பெரும்பான்மையினரா? இருக்கின்ற கலாச்சாரமே சீர்கேடாக இருக்கின்றது. தன் வாழ்க்கைத்துணையினையும், வாழ்க்கை முறையினையும், பாலியல் தன்மையினையும், பாலியல் ஈர்ப்பினையும் முடிவு செய்யும் சுதந்திரம் பெண்களுக்கு மட்டுமல்ல, இந்திய சமூகத்தில் ஆண்களுக்கும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
saravanan1 Years ago
அந்த காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்வது என்பது அரிது. கணவனையும், கணவன் வீட்டாரையும் பொறுத்துக்கொள்ளாவிடில் எங்கே போவது? சமூகமும் ,ஊரும் என்ன சொல்லும், குழந்தகளின் எதிர்காலம். ..இவற்றையெல்லாம் நினைத்து நாலு சுவற்றுக்குள்ளேயே வாழ்க்கை முடிந்து போனது. ஆனால் இன்று தன் சொந்த காலில் நிற்கும் பெண்கள் இந்த கொடுமைகளை பொறுத்துக் கொள்வதில்லை. இதற்கு ஒரே தீர்வு, பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். அவர்கள் தன் சொந்தக்காலில் நிற்கும் வரை, 'என் கடமை முடிந்துவிடும்' என்று சொல்லி திருமணத்திற்கு கட்டாயப்படுத்தாடீர்கள்!
Prabhakaran1 Years ago
மனைவி கொடுமையை எங்கே போய் சொல்வது?
 Displaying 1 - 25 of 26
Only Subscriber Can Post Comments
அட்டை படம்
23-மே -2012
சென்ற இதழ்
16-மே -2012

*Flip Version not supported in Devices