ஒவ்வொன்றுக்கும் பரிசு: 150 பிள்ளையார் பாய்! என் மூன்று வயது மகன் ரமனேஷை, பள்ளியில் சேர்த்து இரண்டு மாதங்களே ஆகியிருந்த காலகட்டம் அது. தினமும் என் மாமியார், சுவாமிக்குப் பூஜைகள் செய்யும்போது, அவருக்கு உதவியாக இருப்பான் ரமனேஷ். அன்று என் மாமியார் பிள்ளையார் படத்துக்குப் பூ போட, ''பாட்டி... பிள்ளையார் 'பாய்’தானே..? அவருக்குப் பூ வைக்கக் கூடாது'’ என்று சொல்லியிருக்கிறான். உடனே வயதான என் மாமியார், ''அல்லாதாண்டா 'பாய்’ சாமி. பிள்ளையாருக்கு வைக்கலாம்!'' என்று தான் புரிந்துகொண்டதற்கு ஏற்ப விளக்கம் கொடுத்திருக்கிறார். ரமனேஷ் விடாமல், ''எங்க கிளாஸ்ல கேர்ள்ஸ் எல்லாம்தான் பூ வெச்சுட்டு வருவாங்க. பாய்ஸ் வைக்க மாட்டோம்!'’ என்று மீண்டும் விளக்கியுள்ளான். இருவருக்குமான இந்த பஞ்சாயத்து முடிவடையாமல், பூஜை அறையிலிருந்து, எங்களிடம் வர, இருவரின். . .