குற்றவாளிகள் தப்பவே முடியாது...
அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஆ.ராசா தன் அமைச்சர் பதவியை இழந்தது தொடங்கி திகார் சிறைக்குள் தள்ளப்பட்டது வரை அத்தனைக்கும் முக்கியக் காரணம், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி! 15 மாத திகார் சிறை வாசம் கடந்து, ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார் ராசா. இதைவைத்து, 'இனி சி.பி.ஐ. விசாரணை பிசுபிசுத்துவிடும்’ என்றும் 'ஸ்பெக்ட்ரம் பூதம் அவ்வளவுதான்’ என்றும் எக்கச்சக்க அனுமானங்கள். இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணங்களில் தீவிரமாக இருந்த 'ஸ்பெக்ட்ரம் டெரர்’ சுப்பிரமணியன் சுவாமியிடம் பேசியதில் இருந்து... ''ஆ.ராசாவுக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதால் ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீவிரம் குறைய வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்களே?'' ''இது சுத்த அபத்தம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகுதான் அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகு ஜாமீன். . .