'ஒருவருக்கு ஆணவம் மட்டும் இருந்துவிட்டால், வேறு எதுவும் அவருக்கு அழிவைத் தேடித் தர வேண்டியதில்லை’ என்பார்கள். ஸ்ரீபிரம்மாவுக்கு, படைப்புத் தொழில் செய்வதால் கர்வம் தலைக்கேறியது. செருக்குடன் இருந்த பிரம்மா, பல இன்னல்களுக்கு ஆளானார். பின்னர், கர்வம் தொலைந்தால்தான் படைப்புத் தொழிலைக் குறையறச் செய்ய முடியும் என உணர்ந்தவர், சிவனாரிடம் மனமுருகிப் பிரார்த்தித்தார். 'காவிரியின் தென்கரையில் கரவிந்த வனம் உள்ளது. அங்கே சென்று, லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா’ என அருளினார் சிவபெருமான். அதன்படி கரவிந்த வனத்துக்கு வந்தார் பிரம்மதேவன். கரவிந்தம் என்றால், களா மரம் என்று அர்த்தம். அது, களா மரங்கள் சூழ்ந்த வனப் பகுதி என்பதால் களா வனம் என்றும், கரவிந்த வனம் என்றும் அழைக்கப்பட்டது. அந்த வனத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, கடும். . .