'வீட்டிலிருந்தே ஏதாவது சம்பாதிக்க வேண்டும்' என்கிற எண்ணம், இங்கே பெண்கள் பலருக்கும் இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு... குழந்தை பிறப்பு, அதை வளர்ப்பது என ரொம்ப பிஸியாக இருந்துவிட்டு, குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு, வீட்டில் அதிக நேரம் கிடைக்கும்போது... ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் அல்லது வீட்டிலிருந்தபடி சம்பாதிக்க வேண்டும் என்பது சரியான பிளானே! இப்படிப்பட்ட தேடலில் இருப்பவர்களுக்கு... பங்குச் சந்தையும் கைகொடுக்கும். கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் முதலீடு இருந்தால்... பங்குச் சந்தை மூலம் பெண்களும் சம்பாதிக்க முடியும்! வீட்டில் ஒரு கம்ப்யூட்டர், இணையதள வசதி இருந்தால், நீங்களும் பங்குச் சந்தை மூலம் பணம் பண்ணலாம் வாருங்கள். எந்த ஒரு தொழில் துவங்குவதற்கு முன்பும் அத்தொழில் பற்றிய அனுபவங்கள், நுணுக்கங்கள் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதுபோலத்தான் பங்குச். . .