சென்ற மாதம் கும்பகோணத்திற்கு சென்றிருந்தபோது வழியில் திருவையாற்றில் ஆண்டவர் அசோகா கடையில் அரை கிலோ அசோகா அல்வா வாங்கி சுவைத்தோம். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கணேசமூர்த்தி வரவேற்கும் விதமே தனி. எல்லோரையும் கைகூப்பி 'வாங்கய்யா' என்று புன்னகையுடன் வரவேற்கும் விதம் அசோகா அல்வாவைவிட இனிமையாக இருந்தது.