டெங்கு... கோடை விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாட வேண்டியவர்களை முடக்கிப் போட்டிருக்கும் விஷக் காய்ச்சல். நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே ஒரு மாதத்துக்கு முன் பரவ ஆரம்பித்த இந்தக் காய்ச்சலுக்கு இதுவரை 33 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. காய்ச்சலைவிட அதன் பரவல் குறித்த வதந்திகள் தென் மாவட்ட மக்களைப் பெரும் பீதிக்கு உள்ளாக்கி இருக்கின்றன. டெங்கு காய்ச்சலின் இயல்பு, வரும் முன் காக்கும் முன்னேற்பாடுகள் குறித்து மருத்து வர்களிடம் பேசினோம். ''பன்றிக் காய்ச்சல்போல இது இருமல், தும்மல் மூலம் நேரடியாகப் பரவாது என்பதால், பதற்றம் வேண்டாம்'' என்கிறார் பொதுநல மருத்துவர் எம்.நாகஜோதி. ''வைரஸ் காய்ச்சலில் முக்கியமானது டெங்கு. இதன் மோசமான அபாயம் என்னவென்றால், இதற்குத் தடுப்பு ஊசியோ, தடுப்பு மருந்தோ கிடையாது. 'ஏடிஸ் எஜிப்டி’ எனும் வகைக் கொசுக்கள். . .