ஆடும் ஷாப்பிங் சாம்ராஜ்யம்!
ஷாப்பிங் சாம்ராஜ்யமான தியாக ராய நகரில் உள்ள பிரதான கட்டடங்களை சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சீல் வைக்க, ஆடிப்போய் இருக்கிறது சென்னை. சமூக ஆர்வலரான 'டிராஃபிக்’ ராமசாமி, சில வருடங்களுக்கு முன்பு போட்ட வழக்குதான் இதற்கு அடிப்படை. ''தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து போகும் இடம் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவும், தி.நகர் பஸ் நிலையத்தை நோக்கிச் செல்லும் வடக்கு உஸ்மான் சாலையும். இங்கு புதிய புதிய கட்டடங்கள் முளைக்கின்றன. இவை விதிமுறைப்படி கட்டப்படுவதில்லை. எந்தக் கடையிலும் பார்க்கிங் வசதியே கிடையாது. அனுமதி வாங்கிய அளவை மீறி மாடிகளைக் கட்டுகிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவலையே படுவதில்லை. மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளை கையில் போட்டுக்கொண்டு இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன'' என்று வழக்குத் தொடுத்திருந்தார்.. . .