ஜெய்தாப்பூரில் எதிர்ப்பு...கூடங்குளத்தில் ஆதரவு!
'கூடங்குளம் அணுஉலையைத் திறக்க வேண்டும்’ என்று சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பேசி வரும் சி.பி.எம். கட்சியின் நிலைப்பாட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இந்தச்சூழலில், சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். ''மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் அணு உலை வேண்டாம் என்கிறீர்கள். கூடங்குளம் அணு உலை வேண்டும் என்கிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா?'' ''ஜெய்தாப்பூரில் அமையவுள்ள அணுஉலை, இதுவரை உலகில் எங்கும் சோதிக்கப்படாத தொழில்நுட்பம் கொண்டது. எனவே, அதை இங்கு அனுமதித்து, நம்முடைய மக்களைப் பரிசோதனை எலிகள் ஆக்குவதை ஏற்கவே முடியாது.ஜெய்தாப்பூர் உலைக்காக இப்போதுதான் நில எடுப்பு தொடங்கி இருக்கிறது. பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள், பிறமக்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த மாற்று வழியும் சொல்லப்படவில்லை. அதனால், ஜெய்தாப்பூர் அணுஉலைத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம். கூடங்குளத்தைப் பொறுத்தவரையில்,. . .