அரசாங்கம் கொடுத்தது போலி பட்டாவா?
'நாங்க திருப்பூரில் இருந்து பேசறோம். எங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வீட்டுமனைப் பட்டா போலி ஆனது என்று சொல்கிறார்கள். அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் தவிக்கிறோம்’ - இப்படி ஒரு புகார் ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) பதிவாகி இருந்தது. புகார் சொல்லப்பட்டு இருந்த திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்துக்குப் போனோம். நம்மிடம் பேசிய பழனிசாமி, ''2002-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த அரசு விழாவில் என்னுடன் சேர்த்து 153 தலித் மக்களுக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, வீட்டுமனைப் பட்டா வழங்கினாங்க. இங்கே பக்கத்தில் இருக்கும் கள்ளிமேடு என்ற இடத்தில் அனைவருக்கும் நிலம் பிரித்துத் தரப்பட்டது. இங்கே பஞ்சாயத்துத் தலைவராக அன்று முதல் இன்று வரை இருக்கும் சோமசுந்தரம் தி.மு.க-வைச் சேர்ந்தவர். அவர், வீட்டு மனைப். . .