மிஸ்டர் கழுகு: கொடநாட்டில் ஸ்டாலின்?
கழுகார் உள்ளே நுழைந்து நம் முன் உட்காரும்போது ஒரு எஸ்.எம்.எஸ்.! ''திடீர்த் தலைவலி காரணமாக, கோவையில் இருந்து அவசர அவசரமாக சென்னை திரும்புகிறார் ஸ்டாலின். அதுதான் தகவல்!'' என்றார். ''ஊட்டியில் குதிரை சவாரி செய்ததாக தகவல் வந்ததே!'' என்றோம். ''கடந்த 25-ம் தேதி சென்னையில் நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போதே அவருக்குக் காய்ச்சல். முக்கியப் பேச்சாளர் கருணாநிதி என்றாலும், அவரது கொளத்தூர் தொகுதியில் கூட்டம் நடப்பதால் நிச்சயம் கலந்துகொள்வேன் என்று வந்தார் ஸ்டாலின். கூட்டத்தில் நீண்ட நேரம் ஆக்ரோஷமாகப் பேசினார். அங்கு இருந்து ஓய்வுக்காக ஊட்டி சென்றார். பெர்சனல் விசிட் என்றால் பல ஹேஸ்யங்களுக்கு இலக்காக நேரிடும் என்பதால் கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றை அறிவித்து, அதையே காரணம் ஆக்கினார்கள். 28-ம் தேதி சனிக்கிழமை. . .
பின்னல் இருக்கும் கொசுவிரட்டி...