சித்திரைக் குழந்தை... குடும்பத்தைக் குலைக்குமா ?
சித்திரை அப்பன்... தெருவில் விட்டான்' என்றொரு சொலவடை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் சொல்லப்படுவது உண்டு. சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தை, அந்தக் குடும்பத்தையே கதிகலங்க அடித்துவிடும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த சொலவடை இது! சமீபத்தில் நாளிதழில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு ஒன்று... அர்த்தமற்ற அந்தப் பயம் மருத்துவம் சிறக்கும் இந்த 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்பதை உறுதிபடுத்தியுள்ளது! செய்தி இதுதான் - திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏவூரைச் சேர்ந்த கோமதி, ஆடி மாதம் கர்ப்பம் தரித்திருக்கிறார். 'ஆடி மாதத்தில் கர்ப்பம் தரித்தால் சித்திரை மாதத்தில்தான் குழந்தை பிறக்கும். அப்படி சித்திரையில் குழந்தை பிறந்தால் குடும்பத்துக்கு ஆகாது. எனவே, கோமதியைக் கொன்றுவிடு’ என்று, கோமதியின் கணவர் தனபாலிடம் அவர் பெற்றோர் சொல்ல,. . .