அழகிய மலையில்... வற்றாத கங்கை!
பெங்களூருவில் இருந்து சுமார் 66 கி.மீ. தொலைவில் உள்ளது கோலார் நகரம். அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அந்தர கங்கை. கோலார் பெட்டா, கோலார் மலை, சதஸ்ரிங்க பர்வதம் (நூறு முகடுகள் கொண்ட மலை) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது அந்தர கங்கை! மலையடிவாரத்தில் இருந்து சுமார் 215 படிகளையும், அதன் பிறகு படிகள் இல்லாத மலைப் பாதையையும் கடந்து சென்றால், ஓங்கி உயர்ந்த மலையை அடையலாம். அங்கிருந்து மொத்த ஊரையும் பார்க்கும்போது ஏற்படுகிற பரவசத்துக்கு அளவே இல்லை. மலையில் சதுர வடிவக் குளம் ஒன்று உள்ளது. குளக்கரையில் சிறியதொரு மாடம். அந்த மாடத்தில் உள்ள சுவரில் அழகிய சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. அது, அழகிய கருங்கல் நந்தி. அந்த நந்தியின் வாயில் இருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. வருடம் முழுவதும் வற்றாத ஜீவ ஊற்று இது எனப் போற்றுகின்றனர், பக்தர்கள்! இந்த சுனை நீர், எங்கிருந்து உற்பத்தியாகி, எந்த வழியாக வந்து,. . .