அரங்கனின் பேரருளால்... பிரிந்த தம்பதி சேருவர்!
'இன்றைக்கு நாம் எழுந்தருளின இடத்திலே திருக்காப்பு சேர்த்துக்கொண்டு, திருமுக மண்டலத்தைத் திருப்பிக்கொண்டு, திருச்சேவடிமார்கள் கைகளால் பந்துக்களாலும் பழங்களாலும் விட்டெறிவித்து, இப்படி ஒருநாளும் பண்ணாத அவமானங்களையெல்லாம் இப்படிப் பண்ணவந்த காரியம் எதற்காக?' யார் யாரை அவமானப்படுத்துகிறார்கள்? எதற்காக இந்த அவமானம்? அடடா..! சக்கரவர்த்திகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியானவரும், சக்ரவர்த்தித் திருமகனால் ஆராதிக்கப்பட்டவரும், எல்லா திவ்விய தேச எம்பெருமான்களுக்கும் ராஜாவானவரும், ஆழ்வார்கள் அனைவராலும் அபிமானிக்கப் பெற்றவருமான ரங்கராஜாவன்றோ இப்படிச் சோகித்துப் புலம்புகிறார்! அதுவும், கருணாநாயகியான ரங்கநாயகித் தாயார் சந்நிதி வாசலின் முன்னே நின்றுகொண்டு, இப்படி அவமானப்படுகிறாரே? தாயாரின் இந்தக் கோபத்துக்கு என்ன காரணம்? பங்குனி 6-ஆம் திருநாள், ஆயில்ய நட்சத்திரம். நம்பெருமாள் ஸ்ரீரங்கம் வந்தடைவதற்காகக் கடும் தவம் செய்த, தர்மவர்மா எனும் சோழ மன்னனின் குலக் கொழுந்தான கமலவல்லித் தாயாரின் திருநட்சத்திரம் அது.. . .