''பணம் வலிமை வாய்ந்தது. அதை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், அளவுக்கு அதிகமாகவும், நேர்மையற்ற வழியிலும் அதை சேர்க்க நினைக்கும்போது அது நம் ஆன்மாவை கொன்றுவிடுகிறது. பணத்தின் பின்னால் ஓட ஆரம்பித்து, அடியோடு மாறிப் போன நல்ல மனிதர்கள் பலரையும் நான் அறிவேன். நம் சமூகம் எளிமையான வாழ்க்கை முறையை விரும்பி ஏற்றுக் கொண்டது. அது வேண்டும், இது வேண்டும் என்று நம் முன்னோர்கள் அலைந்ததில்லை. இருப்பது போதும் என்று நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைக்குப் போதும் என்று நினைக்கிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நிறைய பணம், நிறைய பொருட்கள் என்பதே ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்கிறது. நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அதை தவறான வழியில் சம்பாதிக்க நினைப்பது தவறு. மற்றவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டு. . .