இன்னொரு 100 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு பிரதமர் பஞ்சமே இல்லை. ராகுல், பிரியங்கா, வதேரா, ரேகன், மிரயா என ஐந்து அவதாரங்கள் ஒரே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் உதயமாகிவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற வந்திருக்கும் இந்தப் புதிய பிரம்மாக்களை, இந்தியாவை ரட்சிக்க வந்தவர்களாகக் காட்டத் தொடங்கி இருக்கிறது காங்கிரஸ். 'இரண்டாவது ராஜீவ்’ என்று ராகுலுக்குப் பட்டம். 'இளைய இந்திரா’ என்று பிரியங்காவுக்கு மகுடம். 'இவர்களுக்கு நான் மட்டும் இளைத்தவனா?’ என்று புல்லட்டில் ஏறிவிட்டார் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. குடும்பமே பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால், பிள்ளைகள் வீட்டில் இருக்கப் பயப்படாதா? பிரியங்கா-வதேரா தம்பதிக்குப் பிறந்த ரேகனும் மிரயாவும் உ.பி. பிரசார மேடைக்கு வந்து கை காட்டினார்கள். அமேதியில் அந்தக் குழந்தைகளின் முகங்களைப் பார்த்த இளம் காங்கிரஸார் நம்பிக்கை பெற்றிருப்பார்கள். மொத்தத்தில் நேரு. . .
தகுதி இல்லாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது தான். அந்த 'ரொம்ப நாள்' எவ்வளவு? ஒவ்வொரு தகுதி இல்லாத நபருக்கும் ஐந்து ஐந்து ஆண்டுகளா? இப்படி கொடுத்து கொடுத்தே 60 ஆண்டுகள் ஆகிவிட்டன...
சீனு