'தானே’ தாக்குதலில் கல்விக் கோயில்களும் கரைந்தன பல இடங்களில். அரசாங்கப் பள்ளிக் கட்டடங்களின் தரம் அனைவரும் அறிந்ததுதான். ஆயுதங்கள் வாங்க ஆயிரமாயிரம் கோடிகளில் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கும் இந்த நாட்டில்தான்... அறிவுக் கோயில்கள் இன்றும் மரத்தடிகளில் நடக்கின்றன. ஒரே கட்டடத்துக்குள் ஒன்பது வகுப்பறைகள். எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் மேற்கூரைகள். மண்ணில் எழுதிப் பழகிய குருகுல வாசம் போனாலும் அதை ஞாபகப்படுத்தும் வகையில் பெயர்ந்து தூர்ந்துபோன தரைத் தளங்கள். சுண்ணாம்பு பார்க்காத சுவர்கள்... மராமத்து பார்க்கப்படாத மர பெஞ்ச்சுகள்... இப்படி அரசுப் பள்ளிகளின் அவல நிலையை அடுக்கத் தொடங்கினால், கல்வித் துறை மானியக் கோரிக்கைப் புத்தகங்களைவிட மலை அளவு பெரிதாக இருக்கும். இத்தகைய நிலையில், இயற்கையும் பதம் பார்க்க ஆரம்பித்தால்? விகடன் 'தானே’ துயர் துடைப்பு. . .