கடந்த 1.4.2012 இதழில் வெளியான, 'தமிழ்க்கூடு’ கட்டுரை குறித்து இயக்குநர் தங்கர்பச்சான் நமக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், 'எனது படைப்பு, சிந்தனை, எழுத்து, செயல் எல்லாமே... தேய்ந்து, தொலைந்து, அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் தமிழினத்தைப் பற்றியதாகவே இருக்கிறது. அதன் தாக்கங்களால் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென உதித்ததுதான் இந்தத் 'தமிழ்க்கூடு’. இது கட்சி அல்ல. இயக்கம். கட்சிகளால் தமிழ்நாட்டு மக்கள் படும்பாடு போதாதா? கொஞ்சம் ஏமாந்தால் முதுகிலேயே சுவரொட்டியை ஒட்டிவிடும் அளவில் அரசியல் கட்சிகளின் சேவை இருக்கும்போது, அந்தக் கூட்டத்தில் நானும் சேர்ந்துகொள்வதா? 'இது அரசியல் கட்சி’ என்று, ஜூ.வி-யில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்க்கூடு இன்னொரு அரசியல் கட்சி இல்லை. வாக்குகளை விற்காத தமிழர்களை உருவாக்கும் இயக்கம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.. . .