சகாயத்தின் திட்டங்களை செயல்படுத்த மாட்டேன்!
'நாமக்கல்லில் சகாயம் கலெக்டராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் என்பதாலேயே, பல நல்ல விஷ யங்களை முடக்கி விட்டார்கள். நேரில் வந்தால் நிறைய தகவல்கள் தருகிறேன்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) அழைப்பு வந்தது. நமக்குப் புகார் சொல்லி இருந்த நாமக்கல் நகர அரிமா சங்க உறுப்பினரும், சர்வகட்சி ஒருங் கிணைப்புக் குழுத் தலைவருமான வாசு சீனிவாசனைச் சந்தித்தோம். ''நாமக்கல் மாவட்டத்தில் சகாயம் கலெக்டராக இருந்தபோது, உலக வெப்பமயமாதலைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பராமரிக்கவும் புறம் போக்கு நிலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டம் போட்டி இருந்தார். அதற்கு, அரிமா சங்கத்தின் உதவியைக் கேட்டிருந்தார். கலெக் டரின் ஆர்வத்தைப் பார்த்து நாங் களும் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து லத்துவாடி பஞ்சாயத்தில் 400 மரக்கன்றுகளை நட்டோம். தொடர்ந்து அவற்றைப் பராமரித்தும். . .