அன்று,ஏழாம் வகுப்புடன் பிரேக்... இன்று, ஏகப்பட்ட ரெக்கார்ட் பிரேக் !
''குடும்ப வறுமையாலும், சூழ்நிலையாலும் ஏழாம் வகுப்புடன் என் படிப்பு தடைப்பட்டு நின்றபோது, 'இதுதான் முற்றுப்புள்ளி' என்று நான் சமரசம் ஆகிவிடவில்லை. எட்டு வருடங்களுக்குப் பின் மீண்டும் என் படிப்பைத் தொடர்ந்தேன். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பி.ஏ, எம்.ஏ, பி.எட், எம்.ஃபில், பிஹெச்.டி, தையற்கலை, தட்டச்சு, இந்தி என கல்வியில் என் எல்லைகளை விரித்தேன். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என இவை எல்லாம் இப்போது எனக்கான அடையாளங்கள்!'' - முன்னுரையிலேயே ஈர்க்கிறார் வேலூர், விநாயக முதலியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் ருக்மணி பன்னீர்செல்வம்! ''ஆம்பூர்தான் சொந்த ஊர். வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட விவசாயக் குடும்பம். படிப்பு வாசனையே அறியாதவர்கள்தான் தாயும் தந்தையும்.. . .