''ஒவ்வொரு தடவை ஊருக்குப் போகும்போதும், 'சொந்தமா வீடு கட்டிடுப்பா!’ங்குறதுதான் அப்பாவின் நலம் விசாரிப்பாகவே இருக்கும். இப்போ இந்த வீட்டைக் கட்டி முடிச்சு நிமிரும்போது, ஏதோ இந்த ஜென்மத்துக்கான பயனை அடைஞ்ச மாதிரி தோணுது!'' - 15 வருடங்களுக்கு முன் கும்பகோணத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்தவர், குமரேசன். தன் உழைப்பின் உறுதுணையோடு சென்னை, ஊரப்பாக்கம் அருகில் உள்ள காரணைபுதுச்சேரியில் தனக்கான 'மிடில் கிளாஸ்’ வீட்டை கட்டியிருக்கும் நிறைவு அவர் முகத்தில்! ''புரமோஷனுக்காக வெயிட்டிங். அடுத்ததா வீட்டோட முதல் தளத்தை எழுப்பணும், கார் வாங்கணும்!'' என்று கனவுகளை விரிப்பவருக்கு, இடம் வாங்கிக் கொடுத்து, வீட்டைக் கட்டி, கையில் சாவியையும் திருப்தியையும் கொடுத்திருப்பவர், சென்னை, 'டச் கன்ஸ்ட்ரக்ஷன்’ அரவிந்த்ராஜ். ''குமரேசன் சாரோட குழந்தையும், என்னோட குழந்தையும் ஸ்கூல்மேட். எங்களோட அறிமுகமே. . .
sakthisaravan21@gmail.com