இன்றைக்கு வாழும் இதே வாழ்க்கையை, நமது ஓய்வுக் காலத்திலும் வாழ எத்தனை பேரால் முடியும்? இன்றிருக்கும் விலைவாசியில் ஒரு மாதத்துக்கு 20,000 ரூபாய் செலவாகிறது என்றால், இன்னும் 20 வருடங்களில் 80,000 ரூபாய் வரை செலவாகும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதிகரித்து வரும் மருத்துவத் தொழில்நுட்பம், வாழ்க்கைத் தரம் காரணமாக ரிட்டயர்மென்ட்டுக்குப் பிறகு, 30 ஆண்டு காலம் வாழும் வாய்ப்பு, சமீப வருடங்களாக பலருக்கும் உறுதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அந்த ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக யார் கையையும் எதிர்பார்க்காமல் வாழ, பென்ஷனுக்கான சேமிப்பு மிக அவசியம். அதுகுறித்து பார்ப்போமா..! பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்களில்கூட பென்ஷன் கொடுப்பதில்லை என்பதுதான் இன்றைய நிஜமாக இருக்கிறது. அப்படியிருக்க... தனியார் நிறுவனங்களைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை. அதிலும் பெரும்பாலான. . .