அழகு... அற்புதம்... ஆண்டவன் தரிசனம்!
தீர்த்தம், தலம், புராணக் கதைகளால் மட்டுமின்றி மூர்த்தங்களாலும் சிறப்பு பெற்ற திருக்கோயில்கள் பலவுண்டு. அவற்றுள் ஒன்பது தலங்களையும், அந்தத் தலங்களில் கோயில் கொண்டிருக்கும் தெய்வ மூர்த்திகளின் விசேஷ அம்சங்களையும் அறிந்து மகிழ்வோம்! பழநி அறுபடை வீடுகளில் ஒன்று பழநியம்பதி. இங்கே மலைக் கோயிலில் அருளும் முருகக் கடவுள், கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தியும் இடக் கையை இடையில் அமர்த்தியபடியும் ஸ்ரீஞான தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி அருள்கிறார். ஸ்கந்த வடிவமான இவரின் விக்கிரகம், போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது என்பார்கள். பாதரசம், மதார்சிஸ், தானகம், லிங்கம், கந்தகம், வீரம், பூரம், வெள்ளை, மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள் ஆகும். திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், இலவண பாஷாணம், பவளப். . .