வரம் கிடைக்கும்... வாழ்க்கை செழிக்கும்!
வடபழநி, கந்தகோட்டம், பெசன்ட்நகர் அறுபடைவீடு, குமரன் குன்றம், குன்றத்தூர்... தருமமிகு சென்னையின் மகிமைமிகு முருகன் திருக்கோயில்கள் வரிசையில் மற்றுமொரு கோயிலும் உண்டு. அது அமைந்திருப்பது, சென்னை- மேற்கு சைதாப்பேட்டையில்! இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசிவசுப்ர மணிய ஸ்வாமியின் மகிமையைப் பற்றி கதை கதையாய்ச் சொல்கிறார்கள் பக்தர்கள். ''சுமார் நூறு வருடங்களுக்கு முன், ஒருநாள் நள்ளிரவில் கோயிலுக்குள் திருடன் ஒருவன் நுழைந்துவிட்டான். முருகப்பெருமானின் நகைகளைத் திருடும் நோக்கில், ஸ்வாமியின் திருமேனியில் கை வைத்தானோ இல்லையோ... அவனது பார்வை பறிபோனது. அந்தத் திருடன் கதறினான். அதற்குள், விஷயம் அறிந்து பொதுமக்களும் பக்தர்களும் அங்கே கூடிவிட்டார்கள். திருடனை என்ன செய்யலாம் என யோசித்தபோது, 'முருகனே அவனைத் தண்டித்து விட்டார்; நாம் ஒன்றும் செய்யவேண்டாம்’ என்று எல்லோரும் ஏகமனதாகத் தீர்மானித்து அவனை. . .