குறையும் வட்டி விகிதம்... கொட்டிக் கொடுக்கும் பங்குகள்!
பொற்காலமே இனிமேல்தான்! நிஃப்டி 4531 என்பதுதான் அடுத்த சில வருடங்களுக்கு குறைந்தபட்ச புள்ளி..! சந்தை மீண்டும் காளையின் பிடியில்! கடந்த சில மாதங்களாக சந்தை பற்றி நாணயம் விகடன் சொல்லி வந்த தீர்க்கமான முடிவுகள் இவை. நாம் சொன்னபடியே சந்தையில் நடந்திருக்கிறது. நிஃப்டி கிட்டத்தட்ட 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இந்த வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிற மாதிரி பணவீக்கமும் கட்டுக்குள் வந்திருக்கிறது. இதனால் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் பலமாகவே இருக்கிறது. இந்த நிலைமையில் சந்தை எதை நோக்கி செல்லும், வட்டி விகிதங்களைக் குறைக்க ஆர்.பி.ஐ. முடிவு செய்யும் பட்சத்தில் எந்தெந்த துறைகளுக்கு சாதகமாக இருக்கும், அந்தத் துறைகளில் இப்போதைக்கு முதலீடு செய்ய ஏற்ற பங்குகள் எவை என்கிற பல கேள்விகளோடு பங்குச் சந்தை நிபுணர் ஸ்ரீராமை சந்தித்தோம். சந்தையின் போக்கினை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவர் நம் கேள்விகளுக்கு விளக்கமாகவே பதில் சொன்னார். ''கடந்த ஒரு மாதத்துக்குள் சந்தை. . .