மை டியர் மணி! - லிங்குசாமி, இயக்குனர்.
சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கத்துக்குள் நுழைந்தபோது கையில் காசில்லாமல் அலைந்திருக்கிறேன். அதே சாலைகளில் இன்று நான் காரில் கடந்து போகிறேன். ஒன்றுமில்லை என்பதில் ஆரம்பித்து எல்லாமுண்டு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். ஆனால், பணம் சார்ந்த விஷயங்களில் அன்றிருந்த மனநிலை எனக்கு இன்றும் மாறவில்லை; நான் மாற்றிக் கொள்ளவும் இல்லை. பாக்கெட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறேன் என்று நான் எப்போதும் பார்த்ததில்லை. பணமே இல்லை என்றாலும்கூட திட்டமிட்ட வேலையை நிறுத்த மாட்டேன். உதவி இயக்குநராக இருந்த காலக்கட்டங்களில் பஸ் டிக்கெட் எடுக்கவே காசிருக்காது, ஆனால், பக்காவாக கிளம்பிவிடுவேன். வழியில் எவனாவது ஒரு நண்பன் மாட்டிக்கொண்டு எல்லாச் செலவுகளையும் செய்வான். கீழே கிடந்த காசுகளைப் பொறுக்கிக்கூட சில பொழுதுகளை சுகமாக ஓட்டியிருக்கிறேன். ஒருமுறை நானும், எனது நண்பர்களும் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்திலிருந்த மளிகை கடையில். . .