|
| வார ராசிபலன்: 24-05-2013 முதல் 30-05-2013 வரை
கும்பம்: அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய.
3-ல் கேதுவும், 4-ல் புதனும் சுக்கிரனும் உலவுவதால் எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். புகழும் பொருளும் கூடும். சுகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். 4-ல் சூரியனும் செவ்வாயும் குருவும் உலவுவதால் அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 9-ல் சனியும் ராகுவும் இருப்பதால் தர்ம சிந்தனை உண்டாகும். 27-ஆம் தேதி முதல் புதன் 5-ஆமிடம் மாறினாலும் நலம் புரிவார். 29-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறி, புதனோடு கூடுவதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். புத்திசாலித்தனம் கூடும். கலைகளில் ஈடுபாடு கூடும். பொழுது போக்கு அம்சங்கள் லாபம் தரும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மே 27. 30 (இரவு).
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
எண்கள்: 5, 6, 7.
|