|
| மாத ராசிபலன்: 2013 மே 1 முதல் 31 வரை
மீனம்:
புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் ஓரளவு சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு நல்ல திருப்பம் உண்டாகும். மாதர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். 2-ல் சூரியன், செவ்வாய், கேது ஆகியோர் உலவுவதால் மற்றவர்களது மனம் புண்படும்படி சூடான வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நல்லது.
குடும்பத்தாருடன் சுமுகமாகப் பழகவும்.
குரு 3-ல் இருப்பதாலும், சனியும் ராகுவும் 8-ல் இருப்பதாலும் உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் தடைப்படும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். கண், வாய், பல், முகம் மற்றும் மறைமுக நோய்நொடிகளுக்கு ஆளாக நேரலாம். உடல்நலனில் கவனம் செலுத்தவும். 4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதால் கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
13-ஆம் தேதிமுதல் புதன் 3-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 15-ஆம் தேதி முதல் சூரியனும் 23-ஆம் தேதி முதல் செவ்வாயும் 3-ஆமிடம் மாறுவதால் வெற்றிவாய்ப்புக்கள் அதிகரிக்கும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். போட்டி,பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்புத் துறையினர்கள் வளர்ச்சி காண்பார்கள். 27-ஆம் தேதி முதல் புதனும், 29-ஆம் தேதி முதல் சுக்கிரனும் 4-ஆமிடம் மாறுவதால் சுகானுபவம் உண்டாகும். வியாபாரம் பெருகும். நண்பர்கள், உறவினர்களது தொடர்பு பயன்படும். 31-ஆம் தேதி முதல் குரு 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் தொழில் ரீதியாக வளர்ச்சி காண வழிபிறக்கும்.
பூரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: மே.1, 4, 6, 7, 12, 16, 20, 22 (பகல்), 27, 29, 30, 31.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.
எண்கள்: 5, 6. |